11 December 2014

அம்மைத் திருப்பதிகம் - திருவருட்பா

சிவகாமி அம்மை மீது பாடப்பட்ட திருப்பதிகம்

அபிராமி அந்தாதி பாடிய அபிராமிப் பட்டர் பதினாறு செல்வங்களைப் பற்றிப் பாடுகிறார்.

வள்ளல் பெருமானோ பதினோரு செல்வங்கள் வேண்டும் என விண்ணப்பிக்கிறார்.

          பொய்யாத மொழியும் மயல் செய்யாத செயலும்வீண்    
                  போகாத நாளும் விடயம்                           
           புரியாத மனமுமுட் பிரியாத சாந்தமும்                   
                    புந்திதள ராத நிலையும்
            
           எய்யாத வாழ்வும்வே றெண்ணாத நிறைவும்நினை                                                                                                    என்றும்மற வாத நெறியும்
             இறவாத தகவும்மேற் பிறவாத கழியும்இவ்          
                    ஏழையேற் கருள்செய் கண்டாய்              
                                                                                        
            கொய்யாது குவியாது குமையாது மணம்வீசு
                      கோமளத் தெய்வ மலரே                      
           கோவாத முத்தமே குறையாத மதியமே
                      கோடாத மணிவி ளக்கே                              
                                                                                       
             ஐயான னம்கொண்ட தில்லையம் பதிமருவும்                    
                       அண்ணலார் மகிழும் மணியே                                
            அகிலாண்ட  மும்சரா சரமும்ஈன்  றருள்பரசி
                       வானந்த வல்லி உமையே.        (பாடல் எண் 3, திருவருட்பா நான்காம் தொகுதி)

பொய் சொல்லாத வாய்,
மயக்கம் செய்யாத செய்கை,
பயன் இல்லாது கழியும் வாழ் நாள்,
ஐம்புல ஆசை கொள்ளாத உள்ளம்,
உள்ளத்தில் இருந்து நீங்காத அமைதி,
அறிவு தளராத நிலை,
வறுமையால் தாழ்வடையாத வாழ்க்கை,
குறைகளை நினைந்து வருந்தாத மனநிறைவு,
எந்த நாளும் உன்னை மறவாத செந்நெறி,
இறத்தலும் பிறத்தலும் அற்ற சிவகதி - இவற்றை எனக்கு அருளுவாய்.

யாரை அருளுமாறு கேட்கிறார்?
அண்டசராசரங்களையும், அவற்றுள் வாழ்கின்ற அத்தனை ஜீவராசிகளையும்
படைத்தும் காத்தும் திருவிளையாடல்    புரிகின்ற   சிவானந்த வல்லியாம்
உமையம்மையைக் கேட்கிறார்.

அவள் எத்தகையவள்? பறிக்கமுடியாத, குவிவதும் வாடுதலும் இல்லாத
நறுமணம் வீசும் அழகிய தெய்வ மலர்! கோர்க்கப்படாத முத்து! தேய்தலும்
வளர்தலும் இல்லாத முழுநிலவு! கோணாத மணிவிளக்கு! தில்லையம்பதியில்
ஐந்து முகத்தோடு எழுந்தருளியிருக்கின்ற அண்ணல் மகிழும் மணி!

இந்தப் புத்தாண்டில் அன்னை சிவகாமி அனைவருக்கும் அனைத்து நலங்களையும்
தந்து அருள் புரிவாளாக.


                                                                                                              
                                                                               












19 November 2014

Prayers and Meditations - The Mother


October 16, 1914

It is Thy Will that I should be like a channel, always open,

always wider, through which Thy forces may pour

themselves in abundance on the world ....................

O Lord, let Thy Will be done.

Am I not Thy Will and Thy consciousness in a felicity supreme?

The being grows immeasurably in largeness and becomes

vast like the Universe.                               - The Mother





17 November 2014

RADHA'S PRAYER

                 RADHA’S PRAYER


O Thou whom at first sight I knew for the Lord of my being and my God, receive my offering. Thine are all my thoughts, all my emotions, all the sentiments of my heart, all my sensations, all the movements of my life, each cell of my body, each drop of my blood. I am absolutely and altogether Thine, Thine without reserve. What Thou wilt of me, that I shall be. Whether Thou chooses for me life or death, happiness or sorrow, pleasure or suffering, all that comes to me from Thee will be welcome. Each one of Thy gifts will be always for me a gift divine bringing with it the supreme Felicity.                                                                                   13 January 1932

MY aspiration to Thee, O Lord, has taken the form of a beautiful rose, harmonious, full in bloom, rich in fragrance. I stretch it out to Thee with both arms in a gesture of offering and I ask of Thee: If my understanding is limited, widen it; if my knowledge is obscure, enlighten it; if my heart is empty of ardors, set it aflame; if my love is insignificant, make it intense; if my feelings are ignorant and egoistic, give them the full consciousness in the Truth. And the “I” which demands this of Thee, O Lord, is not a little personality lost amidst thousands of others. It is the whole earth that aspires to Thee in a movement full of fervor.

O my Sweet Master, my heart is a flaming chapel, and Thou art seated there permanently like the sublimes of idols; so it is that Thy form appears to me, clothed in magnificence, in the midst of the flames consuming my heart for Thee, and at the same time, in my head, I see Thee, know Thee as the Inconceivable, the Unknowable, the Formless; and in this double perception, this double knowledge, lies the plenitude of contentment.

O MY beloved Lord, my heart is bowed before Thee, my arms are stretched towards Thee imploring Thee to set all this being on fire with Thy sublime love that it may radiate from there on the world. My heart is wide open in my breast; my heart is open and turned towards Thee, it is open and empty that Thou mayst fill it with Thy divine Love; it is empty of all but Thee and Thy presence fills it through and through and yet leaves it empty, for it can contain also all the infinite variety of the manifested world. . . .O Lord, my arms are outstretched in supplication towards Thee, my heart is wide open before Thee, that Thou mayst make of it a reservoir of Thy infinite love.“Love me in all things, everywhere and in all beings” was Thy reply. I prostrate myself before Thee and ask of Thee to give me that power.

THERE is a Power that no ruler can command; there is a Happiness that no earthly success can bring; there is a Light that no wisdom can possess; there is a Knowledge that no philosophy and no science can master; there is a Bliss of which no satisfaction of desire can give the enjoyment; there is a thirst for Love that no human relation can appease; there is a Peace that one finds nowhere, not even in death. It is the Power, the Happiness, the Light, the Knowledge, the Bliss, the Love, the Peace that flow from the Divine Grace.











14 November 2014

Prayers and Meditations - The Mother

August 25, 1914













O Lord, let Thy Will be done.

Thy work be accomplished.

Fortify our devotion,

increase our  surrender,

give us light upon the path.

We erect Thee within us as our supreme Master

that Thou mayst become supreme Master of all the earth.

Our speech is still ignorant ; enlighten it.

Our aspiration is still imperfect : purify it.

Our action is still powerless: make it effective.

O Lord, the earth groans and suffers;

chaos has made this world its abode.

The darkness is so deep that Thou alone canst dispel it.

Come, manifest thyself, that Thy work may be accomplished.

12 November 2014

Prayers and Meditations - The Mother

January 31, 1914

O Lord, 
Divine Master of love, 
we want to be conscious of Thee and Thee alone,
be identified with Thy supreme law each time we choose, 
so that it may be Thy Will which moves us, 
and that our life be thus effectively and integrally consecrated to Thee.

IN THY LIGHT WE SHALL SEE, 
IN THY KNOWLEDGE WE SHALL KNOW, 
IN THY WILL WE SHALL REALISE.

10 November 2014

Prayers and Meditations - The Mother

December 7, 1912

Like a flame that burns in silence,
like a perfume that rises straight upward without wavering,
my love goes to Thee;
and like the child who does not reason and has no care,
I trust myself to Thee that Thy Will may be done,
that Thy light may manifest,
Thy Peace radiate,
Thy Love cover the world.
When Though willest I shall be in Thee,
Thyself and there shall be no more any distinction;
I await that blessed hour without impatience of any kind,
letting myself flow irresistibly toward the
boundless ocean.

THY PEACE IS IN ME, AND IN THAT PEACE  I SEE THEE ALONE PRESENT IN

EVERYTHING, WITH THE CALM OF ETERNITY. 

7 November 2014

Prayers and Meditations - The Mother

November 3, 1912


Let Thy Light be in me like a Fire that makes all alive; let Thy divine Love penetrate me.
I aspire with all my being for Thy reign as sovereign and master of mind and heart and body;
let them be Thy docile instruments and Thy faithful servitors.


26 August 2014

107,108. அருணாசல அட்சர மணமாலை

107. பொறுமையாம் பூதர புன்சொலை நன்சொலாப்
        பொறுத்தருள் இஷ்டம்பின் அருணாசலா

பூதரம் என்றால் மலை;  பூமியால் தாங்கப்படுவதால் காரணப்பெயர். திருவண்ணாமலை பொறுமையாம் மலை. மலை வடிவில் இருந்தாலும் மலையே சிவலிங்கமாகக் கருதப்படுவதால் பெருமை பெற்றது.
பொறுமையின் வடிவே, அருணாசலா, நான் உனக்குச் சூட்டும் இந்த அட்சரமணமாலையை ஏற்றுக் கொண்டு அருள்வாய்.

108. மாலை அளித்த அருணாசல ரமணஎன்
         மாலை அணிந்தருள் அருணாசலா

இந்தச் சொல் மாலையை எனக்கு அளித்தவன் அருணாசலனாகிய நீயே! நீயே ரமணன், என்னை மகிழச் செய்பவன்! இந்த மாலையை உனக்கே அணிவிக்கிறேன்! அணிந்து கொண்டு அருள் புரிவாய்

அருணாசலம் வாழி! அன்பர்களும் வாழி! அட்சரமணமாலை வாழி!
















25 August 2014

105. அருணாசல அட்சர மணமாலை

105. என் போலும் தீனரை இன்புறக் காத்துநீ
         எந்நாளும் வாழ்ந்தருள் அருணாசலா!

எந்நாளும் என்போன்ற எளியவரை இன்பமடையும்படிக் காத்து வாழ்ந்து அருள் புரிவாயாக.
ஶ்ரீரமணரைப் போன்று தன்னை உணர்ந்து தன் மயமானவர்கள்,  அகந்தையற்றவர்களாதலின்
தற்பெருமையற்றவர்கள். எனவே 'என் போலும் தீனரை' என்று தன்னையும் அடியார் கூட்டத்தில் ஒருவர் ஆக்கினார். அடியாருக்கும் எனக்கு அருளியது போல 'தன்னை அறியும்'  விழிப்புணர்வை அருள்வாய்.

106. என்பு உருகு  அன்பர்தம் இன்சொல்கொள் செவியுமென்
          புன்மொழி  கொளஅருள் அருணாசலா

ஆன்றோர்களின் எலும்பையும் உருகச் செய்யும் அன்பு நிறைந்த இனிய சொற்களைக் கேட்கும் செவிகள்!
இன்சொல் கேள் ''தோடுடைய செவிகள்!''
''அன்பர் மொழித் தேன் பரவும் வள்ளைச் செவியழகு'' என்பார் வள்ளலார்.

இத்தகைய உன் செவி என் புன்மொழிகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்! இது வெளிப்படையான
கருத்து. ஆனால் இதன் உட்பொருள் என்ன?

அட்சரங்களால் தொடுக்கப்பட்ட இம்மணமாலை புன் மொழியாகுமா? தன்னைத் தான் அறிய,
வழி காட்டும் 'மறையாக' அல்லவா மணமாலை விளங்குகிறது!
இம்மணமாலையை அன்பர்களும் படித்து என்புருகி அருணாசலனின் அருளுக்குப் பாத்திரமாக வேண்டும்
என்பதே இப்பாடலின் கருத்தாகும்.
தன்னடக்கம் என்பது யோகிகள் அணியும் மணிமகுடம்.







24 August 2014

104. அருணாசல அட்சர மணமாலை

104. அன்பொடு உன் நாமம் கேள் அன்பர்தம் அன்பருக்கு
          அன்பனாயிட அருள் அருணாசலா

இறைவனின் பெயரை எப்படி உச்சரிக்க வேண்டும்?
நினைந்து, நெகிழ்ந்து, உணர்ந்து, அன்பே நிறைந்து, உச்சரிக்க வேண்டும்!

'எப்படிப் பாட வேண்டும்? ''வான் கலந்த மாணிக்கவாசக நின் வாசகத்தை நான் கலந்து பாடுங்கால்'
என்பார் வள்ளல்! சும்மா கண் எங்கோ பார்க்க, மனம் எங்கோ திரிய வாய் அசைத்தால் மட்டும் போதாது. இறைவன் நாமத்தை உளத்தோடும், உயிரோடும், கலந்து ஒத வேண்டும்.

இறைவன் நாமத்தை ஒருவர் ஓதும் பொழுது கேட்பவர் நிலை எத்தகையதாக இருக்க வேண்டும்?
மீண்டும் வள்ளலார் பதில் தருகிறார்!
திருவாசகத்தை 'ஓதக் கேட்ட பொழுது அங்கிருந்த கீழ்ப் பறவைச் சாதிகளும்,வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான நாட்டமுறும் என்னில் இங்கு நானடைதல் வியப்பன்றே.'

இறைவன் நாமத்தைக் கேட்டவுடன் மெய்ஞானம் அடைய ஆவல் பெருகுமாறு ஓத வேண்டும்.

''பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும், படிக்க பக்க நின்று கேட்டாலும்,
இத்தனைக்கும் தித்திக்கும் இனித்த சுவைக் கரும்பு,' இறைவன். ( வள்ளலார்)

'அன்பருக்கு அன்பனே' என்கிறது திருவாசகம்.

'இறைவனோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம் தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே,' என்பது அவ்வை வாக்கு.

'பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தை சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்'
என அடியார்பெருமையைப் பாடுகிறார் சுந்தரர் தம் திருத்தொண்டத்தொகையில்.

அன்போடு இறைவன் நாமத்தை உச்சரிக்கக் கேட்கின்ற அன்பர்களுக்கும் அன்பர்கள் உள்ளார்கள்.
அவர்களுக்கும் நான் அன்பானாக அருள் புரிவாய் அருணாசலா.

'அருணாசல' என்ற ஐந்தெழுத்து நாமம்  ஓதுதற்கு எளியது. அருணாசல நாமத்தை ஓதினாலும்,  ஓதுவதைக் கேட்டாலும், மனதால் நினைத்தாலும் இறைவனுடைய அருளுக்குப் பாத்திரமாகலாம்.











23 August 2014

103. அருணாசல அட்சர மணமாலை

சிந்தித்து அருள்படச் சிலந்திபோல் கட்டிச்
   சிறையிட்டு உண்டனை அருணாசலா

சிலந்தி தன் வலையில் அகப்பட்ட இரையை அப்படியே இறுகக்கட்டி, தப்பிக்கவிடாமல் செய்து பின்னர் அதனை உண்ணும்.  அது போல அருணாசலனே உன்னுடைய அருளாகிய வலையில் என்னை மிகவும் கவனத்தோடு கட்டவேண்டுமென்று சிந்தித்துச் செயலாற்றினாய்! என்னைத் தப்பிக்க முடியாதவாறு தன்மயமாக்கிக் கொண்டாய்!
சிறையிட்டு உண்ணுதல் - தன்மயமாக்கிக் கொள்ளுதல்.

22 August 2014

101. அருணாசல அட்சர மணமாலை

 101. அம்புவில் ஆலிபோல் அன்புரு உனில் எனை
           அன்பாக் கரைத்தருள் அருணாசலா

(அம்பு - தண்ணீர், ஆலி -பனிக்கட்டி, )
தண்ணீர் திரவ வடிவிலும், பனிக்கட்டி திடரூபத்திலும் உள்ளது. பனிக்கட்டி உருகினால் மீண்டும் தண்ணீருடன் இரண்டறக்கலக்கிறது. கலந்ததும் பேதங்கள் மறைந்து போவது போல் அன்புருவாகிய உன்னில் என்னை கரைத்து தன்மயமாக்கிக் கொள்வாய் அருணாசலா.
ஆன்மா எனப்படும் மெய்ப்பொருளும், சீவனும் உண்மையில் ஒன்றே! அறியாமையினால் நாம் அவற்றை இரண்டாகக் காண்கிறோம்.

102. அருணையென்று எண்ணயான் அருட்கண்ணில் பட்டேன் உன்
         அருள்வலை தப்புமோ அருணாசலா
அருணாசலம் என்று நினைத்த மாத்திரத்தில் நான் உன் அருள் நிறைந்த கண்ணில் பட்டேன்! உன் அன்பு வலையில் அகப்பட்டுக் கொண்டேன். அதிலிருந்து என்னால் தப்பமுடியுமா? அருணாசலா.
இறைவனின் அருட்பார்வை இருந்தால் எல்லாம் செயல்கூடும் அல்லவா?

21 August 2014

97. அருணாசல அட்சரமணமாலை

97. வீடுவிட்டு  ஈர்த்துஉள  வீடுபுக்குப்  பையஉன்
      வீடுகாட் டினையருள் அருணாசலா

நான் வாழ்ந்து வந்த மதுரையம்பதி வீட்டைவிட்டு என்னை இடம் பெயர்த்து, என்னுடைய  இதய வீட்டில் புகுந்து, மெதுவாக உன் ஆன்மவீட்டைக் காட்டி எல்லாவற்றுக்கும் முடிவான முக்திவீட்டைக் காண்பித்தாய் அருணாசலா.

98. வெளிவிட்டேன் உன் செயல்  வெறுத்திடாது
      உன்னருள் வெளிவிட்டு எனைக்கா அருணாசலா
யாரும் அறியாது என் மனதினை கொள்ளை கொண்டு, என்னை நீ தன்வயமாக்கிக் கொண்டதை உன்னருளாலேயே நான் வெளியே அனைவரும் அறியச் செய்தேன் என்பதற்காக என்னை வெறுத்திடாமல் என்னைக் காத்து அருள் புரிவாயாக.

99. வேதாந் தத்தே வேறற விளங்கும்
      வேதப் பொருள் அருள் அருணாசலா

வேதவியாசர் எழுதிய நூல் வேதாந்தம்! இதன் முடிந்த முடிவான பொருள் ஆன்ம ஞானமாகும். இதனை எனக்கு அனுபவமாக்கிய அருணாசலனே உம்மை வணங்குகிறேன்.

100. வைதலை வாழ்த்தா வைத்தருட் குடியா
         வைத்தெனை விடாதருள் அருணாசலா

நான் இகழ்ந்து கூறுவது போல் தோன்றும் என் உரைகளை புகழுரைகளாக ஏற்றுக் கொண்டு
உன் அடியார்களுள் ஒருவனாய் என்னையும் சேர்த்துக் கொண்டு எப்பொழுதும் என்னைக் கை விடாது
அருள் புரிவாய் அருணாசலா.




   










20 August 2014

96. அருணாசல அட்சர மணமாலை


96. விட்டிடிற்  கட்டமாம்  விட்டிடாது உனை  உயிர்
      விட்டிட அருள்புரி அருணாசலா

யாரை விட்டால் யாருக்குக் கஷ்டம்? இறைவன் அடியாரைக் கை விட்டுவிட்டால் அடியார்களுக்கு மாறாத கஷ்டம்; அடியார்கள் இறைவனை மறந்துவிட்டால் அப்போதும் அவர்களுக்கே துன்பம்.
எனவே அருணாசலா, உயிர் உடலைவிட்டுப் பிரியும் போதும் என்னைக் கை விட்டுவிடாதே. உன் நினைவிலேயே  என் உயிர் பிரிய அருள்வாய்.

அபிராமிப் பட்டர் என்ன சொல்கிறார்? காலன் என்மேல் வரும்போது,'வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் செவ்வியும், உங்கள் திருமணக்கோலமும், சிந்தையுள்ளே அவ்வியம் தீர்த்தென்னை ஆண்ட பொற்பாதமும் ஆகிவந்து வெளிநிற்க வேண்டும்,' என்றும், 'உயிர் உறவு அற்று அறிவு மறக்கும்
பொழுது என் முன்னே வரல் வேண்டும்,' என்று அபிராமி அம்மையை வேண்டுகிறார்.


19 August 2014

95. அருணாசல அட்சர மணமாலை

95. வாஎன்று  அகம்புக்கு உன் வாழ்வுஅருள் அன்றேஎன்
      வாழ்வு இழந்தேன் அருள் அருணாசலா

அகம் புகுந்து ஈர்த்து, 'உன் அக குகையில் எதற்காக சிறை வைத்தாய்' என்று முதலிலேயே கேட்டார் அன்றோ? அதற்கான பதில் இங்கே வருகிறது.

வா என்று அழைத்து என்னை உன்னுடைய இதய வீட்டிற்குள் அழைத்துச் சென்றது  எனக்கு அருள் செய்வதற்குத்தான் என்று எனக்குப் புரிந்துவிட்டது! அந்தக் கணமே நான் என்னுடைய வாழ்வின் சுதந்திரத்தை இழந்துவிட்டேன்.  உன்னிடம் என் வாழ்வை சமர்ப்பித்தேன்! சரணாகதி அடைந்தேன், இனி 'எனது' என்பதும், 'நான்' என்பதும் இல்லை! எல்லாம் நீயேயாகி  என்வாழ்விற்கு நீயே பொறுப்பானாய்.

பூரண சரணாகதியே பக்தியின் முதல், கடைசிப் படிகளாகும்.

      

18 August 2014

94 அருணாசல அட்சர மணமாலை


94. வரும்படி சொலிலை வந்து என் படிஅள
      வருந்திடு உன் தலைவிதி அருணாசலா

(சொலிலை - சொன்னாய்; படிஅளத்தல் -வேலைக்கு கூலி கொடுத்தல்; தலைவிதி - பொறுப்பு)

அருணாசலனே, இளம் பருவத்தில் திருவண்ணாமலை என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே எனது அகத்தில் புகுந்து கொண்டாய். மரண அனுபவத்திற்குப் பின் தந்தையாகிய உன்னைத்  தேடி வரும்படி யாரும் அறியாமல் அழைத்தாய்! உன் அழைப்பைக் கேட்ட மாத்திரத்திலேயே நான் உன்னிடம்
வந்துவிட்டேன். இனி என்னைப் பார்த்துக் கொள்வது உன் பொறுப்பு! கடினம்தான் இல்லையென்று சொல்லவில்லை. ஆனாலும் அது உன் தலைவிதி ஆகிவிட்டது என்று தன் அன்பு மிகுதியால் கூறுகிறார்.

ஸ்ரிரமணர், அரவிந்தர், வள்ளலார், ராமகிருஷ்ணபரமஹம்சர் ஆகிய யோகியர் எவரும் தங்கள்கையில்
பணம் வைத்துக் கொண்டவர்கள் இல்லை. ஆனால் இறைவன் அவர்களுக்குத் தேவையானவற்றை தேவையான போதுகளில் அளித்து வந்திருக்கிறான். இவர்களுடைய வாழ்க்கை வரலாறுகள் இதனை தெள்ளத்தெளிவாய் எடுத்து இயம்புகின்றன.
 

17 August 2014

92, 93 அருணாசல அட்சரமணமாலை

92. லட்சியம் வைத்து அருள் அஸ்திரம் விட்டு எனைப்
       பட்சித்தாய் பிராணனோடு அருணாசலா

லட்சியம் -இலக்கு, அஸ்திரம்- கருவி, பாணம், பட்சித்தாய் - உண்டாய்

என்னை இலக்காக வைத்து, அருள் என்ற அஸ்திரத்தால், 'நான்' என்ற அகந்தை உணர்வை
முழுமையாக அழித்து என்னைத் தன்வயமாக்கிக் கொண்டாய் அருணாசலா.
அருணாசலத் தந்தை தன் மகனாகிய ரமணரை இலக்காக வைத்து, அருளாகிய அஸ்திரத்தால் ஆட்கொண்டானாம்! போற்றுகிறார் அவதாரபுருஷர் ரமணர்.

93. லாபநீ இகபர லாபமில் எனைஉற்று
          லாபமென் உற்றனை அருணாசலா

எல்லாவற்றிலும் லாபநஷ்டக் கணக்கு பார்ப்பது மனித இயல்பு!
மனிதனுக்கு கிடைத்தற்கரிய இறையருள் கிடைப்பது பெரிய அதிர்ஷ்டமாகும்.
ஆனால் எல்லாம் வல்ல இறைவனுக்கோ மனிதர்களால் ஆகப் போவது ஏதும் இல்லை.
இதையே ஸ்ரிரமணர் இங்கு வினவுகிறார்.
'இந்தப் பூவுலகிலோ, மறு உலகிலோ என்னால் உனக்கு என்ன லாபம் கிடைக்கும் என்று
குறி வைத்து உன் அருள் அஸ்திரத்தால் என்னை ஆண்டுகொண்டாய்? சொல்வாய் அருணாசலா!

இறைவன் வள்ளல் பெருமானுக்கு ஞானக்கண்  கொடுத்தான்! பெருமானே,' உன்தயவை எண்ணுந்தோறும் என் இதயம் உருகித் தளதள என்று இளகித் தண்ணீராய் அருத்திப் பெருநீர் ஆற்றொடு சேர்ந்து அன்புப் பெருக்கில் கலந்தது,' என்று ஆனந்திக்கிறார் வள்ளலார்.

ஶ்ரீரமணர் ஆன்ம ஞானத்தால் பூரணமடைந்தவர். இறைவனோ பூரணமானவர்.முழுமையோடு முழுமை கலந்தால் அது முழுமையேயாகும் அன்றோ?







16 August 2014

91. அருணாசல அட்சரமணமாலை

ராப்பகல் இல்லா வெறுவெளி வீட்டில்
ரமித்திடுவோம் வா அருணாசலா

இரவும் பகலும் இல்லாத இதய வெளி ஆத்மா எனப்படுகிறது. இந்த ஆத்மப் பரவெளி வீட்டில் நாம் இருவரும் இன்புற்றிருப்போம் அருணாசலனே, வருவாயாக.

தன்னிடத்தில் தன்னைத் தவிர வேறொன்றும் இல்லை என்பதை உணர்ந்த தவத்தினருக்கு இரவு பகல் என்ற பேதங்கள் இல்லை. அதையே 'வெறு வெளி வீடு,' என்பார். வெறு வெளி வீடே ஆத்மா. அது ஒன்றே!
'ஒன்றென இரண்டென ஒன்றிரண்டென இவை அன்றென விளங்கிய அருட்பெருஞ் சோதி'-
 அகவல்.  ஒன்றா, இரண்டா, இரண்டும் சேர்ந்த ஒன்றா என எவரும் அறியவியலா சக்தியே இறைவன்.
'நானாகித் தானாய் நடித்தருள்கின்றாய் அபயம்,' என்கிறது அருட்பா.

'அல்லும் பகலுமில்லாச் சூதானது அற்ற வெளிக்கே ஒளித்துச் சும்மா இருக்கப் போதாய் இனி மனமே,'
(கந்தரலங்காரம்,17)
மனதில் வஞ்சகமில்லாதவர் அடையும் பரவெளியில் நினைப்பும் மறப்பும் இல்லை, அங்கே சும்மா இருக்கும் சுகமே ரமித்தல்,' ஆகும்.

'போக்கும் வரவும் இரவும் பகலும் புறம்பும் உள்ளும்
வாக்கும் வடிவும் முடிவும் இல்லாத ஒன்று வந்துவந்து
தாக்கும் மனோலயம் தானேதரும்................'கந்தரலங்காரம்,73
போக்கும்வரவும் அற்ற உனது திருவருள் துணைசெய்து மனோலயம் தந்து சொல்லொணா இன்பம் தருகிறது என்று ஆனந்திப்பார் அருணகிரிநாதர்.
இதையே, ராப்பகல் இல்லா வெறு வெளி வீட்டில் ரமித்திடுவோம் வா,' என்கிறார் ரமணர்.







14 August 2014

90. அருணாசல அட்சரமணமாலை

ரமணன்என்று உரைத்தேன் ரோசங்கொளாது எனை
  ரமித்திடச்  செயவா அருணாசலா

யாருக்கும் தெரியாது என்மனதை மயக்கி கொள்ளை அடித்துப் போனவன் எவன்? என்று முந்தைய பாடலில் கேட்டவர் இப்பாடலில் பதில் சொல்கிறார்.

இது வரையிலும் யாருக்கும் தெரியாத ரகசியம் அது! சொல்லி விடட்டுமா? அதுதான், அவன்தான்,
'கருணை மாமலை, ஈன்றிடும் அன்னையிற் பெரிதருள் புரிபவன், குரு உருவாய், கருணைக் கடலாய்,
எனக்கு அருள் நகையிட்டுப் பார்த்தவன், என் பித்தம் தெளி மருந்து, மலை மருந்து,' அனைத்து உலகிற்கும் இதத்தைத் தரும் ரமணன்!
ஓ என்னைக் காட்டிக் கொடுத்து விட்டாயா என்று கோபிக்காமல், 'மெய் அக மென்மலர் அணையில் தன்மயமானதை அனுபவிக்க வாராய், என் அருணாசலனே'!


13 August 2014

89. அருணாசல அட்சரமணமாலை

யாரும் அறியாது என் மதியினை மருட்டி
    எவர் கொளை கொண்டது அருணாசலா

யாருக்கும் தெரியாமல் என் புத்தியை மயக்கி, என்னைக் கொள்ளையடித்துச் சென்றது யார்?
'ஒருவனாம் உன்னை ஒளித்தெவர் வருவார் உன் சூதே இது அருணாசலா,' என்று  முதலிலேயே கேட்டார் தானே?
பொருளைக் கொள்ளை அடிக்கலாம், மதியைக் கொள்ளையடிக்க முடியுமா? முடியும் என்கிறது அன்பு!
இந்த அன்புக்கு ஒரே சாட்சியாக இருப்பது மனது! எண்ணங்களின் உற்பத்தித்தலம்! இந்த எண்ணங்களைப் பற்றிக் கொண்டு செல்வது ஆன்ம விழிப்புணர்வுக்கு வழி வகுக்கும்!
யாருக்கும் தெரியாமல், அகம் புகுந்து ஈர்த்து அருணாசலன் தன்னை அவன் மயமாக்கிக் கொண்டான் என்பதை இங்கு உணர்வு பூர்வமாகச் சொல்கிறார் ரமணர்.

12 August 2014

88. அருணாசல அட்சர மணமாலை

யவன் என் வாயில் மண்ணினை அட்டி
   என் பிழைப்பு ஒழித்தது அருணாசலா

இறைவனின் அருட் செயலை பரிகசிப்பது போல்  வாழ்த்துகிறார் மகரிஷி. சாதாரணச் சிறுவனாக இருந்த தன்னை இறைவன் தன் திருவருளால் ஆட்கொண்டதை இங்கு எடுத்துச் சொல்கிறார்.
என் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டான் என்று கூறக் கேட்கிறோம். இங்கோ 'என் வாயில் மண்ணினை அட்டியது.... பிழைப்பு ஒழித்தது....யார் என்று கேட்காமல் 'யவன்' என்கிறார்.

விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் அகந்தை வழிச் செல்லக்கூடிய  மனதை 'நான் யார்' என்று விசாரித்து அறிதல் மூலம் தெளிவுறச் செய்தாய், இறைவா, இந்தப் பேறு யார்க்கு வாய்க்கும்? என்பதையே,'என் வாயில் மண்ணினை அட்டி ' உலக வாழ்வாகிய அல்லல் பிழைப்பிலிருந்து என்னைக்
காப்பாற்றி விட்டாய் என்று இரு பொருள் தோன்றப் பாடுகிறார்.








11 August 2014

87. அருணாசல அட்சர மணமாலை

மெளனியாய்க் கல்போல் மலராது இருந்தால்
மெளனம் இது ஆமோ அருணாசலா

மெளனம் என்றால் என்ன? பேசாமல் இருப்பது.
சாதாரண மனிதர்கள் மேற்கொள்வது மெளன விரதம்.
பேசாமல் இருப்பவரைப் பார்த்து 'இன்றைக்கென்ன மெளன விரதமா? வாயில் என்ன கொழுக்கட்டையா?' என்றெல்லாம் கேட்கிறோம்.

மெளனமே இறைவனுடைய தியானத்தில் மனம் ஒன்றிக் கிடக்கும் யோகியருக்கு சமாதி என்ற நிலைக்கு அழைத்துச் செல்கிற வழியாக அமைகிறது. அந்நிலையில் இதயத் தாமரை மலரும். தன்னைதானே
உணரும் ஆன்ம நிலை சித்திக்கும்!

கல் இரவோ பகலோ, மழையோ வெயிலோ, எந்த பாதிப்பும் இன்றி மவுனித்துக் கிடக்கிறது. அதற்கு மலர்களைப் போல் மலர்தலும் வாடுதலும் இல்லை! வாழ்க்கையின் இன்ப துன்ப மழையில் நனைந்தாலும் எந்த பாதிப்பும் இன்றி தன்னிலை மாறாமல் இறைவுணர்வில் தோய்ந்து கிடைக்கும் நிலையே மெளனம் என்னும் நிலையோ? சொல்வாய் அருணாசலா!

அருணாசலப் பெயரைக் கேட்டதும் ஆன்ம இன்பம் மேலிடவும், மரணத்தை அனுபவித்துக் கிடைத்த ஆன்ம தரிசனத்தாலும் திருவருணையை அடைந்த ஶ்ரீபகவான் தன்னுணர்வற்று இருந்தார்.  பத்து ஆண்டுகளுக்குப் பிறகே அவரால் அந்த தெய்விகப் பரவெளி ஆனந்தத்திலிருந்து வெளியே வந்து பேச முடிந்தது என்கிறது அவர் வரலாறு.




9 August 2014

86. அருணாசல அட்சர மணமாலை

மோகந் தவிர்த்துன் மோகமா வைத்துமென்
      மோகந் தீராய் என்அருணாசலா

இன்பம் தருகின்ற உலகப் பொருட்கள் மேல் எனக்குள்ள ஆசைகளை நீக்கி
உன் மீது பக்தியால் பித்தடையச் செய்தாய். எத்தனை முயன்றாலும் உன் மீது நான் வைத்துள்ள மோகத்தை விட முடிய வில்லை! அருணாசலனே உன் மீது நான் கொண்டுள்ள ஆசையை நீக்கி
ஆன்மப் பேரின்பத்தில் முழுமையாக மூழ்குமாறு அருள் புரிவாய்.

'ஈசனோடாயினும் ஆசை அறுமின்' என்பது திருமூலரின் திருமந்திர வாக்கு.

8 August 2014

85.அருணாசல அட்சர மணமாலை

மொட்டை யடித்தென்னை வெட்ட வெளியில்நீ
  நட்டமா டினையென் அருணாசலா

(மொட்டையடித்தல் - தலைமுடியை நீக்குதல் என்பது பொதுவான பொருள்,
முற்றிலும் ஒன்றை நீக்குதல், முழுவதும் கவர்ந்து கொள்ளுதல்
வெட்ட வெளி - இதயப் பர வெளி, நட்டமாடினை - நடனமாடினை)

என் அகந்தையை நீக்கி, என்னை முழுவதும் கவர்ந்து கொண்டு, தூய்மையான என் இதயப் பரவெளியில் ஆனந்த நடனம் ஆடுகின்றனை, அருணாசலா.

சிவபுராணம் 'நள்ளிருளில் நடனம் பயின்றாடும் நாதனை, தில்லைக் கூத்தனை,' அழைக்கிறது.

'அதுவினுள் அதுவாய் அதுவே அதுவாய்ப்
பொதுவினுள் நடிக்கும் பூரணப் பொருளே'
ஆன்மா என்ற சிற்றம்பலத்தில் இருந்து நடனமாடி யாவற்றையும் இயக்கும் நிறைவான பொருளே
இறைவன் என்கிறார் வள்ளலார் தன் அகவலில்.

அருணாசல அருட்பெருஞ் சோதி!


7 August 2014

84. அருணாசல அட்சரமணமாலை


மைமயல் நீத்துஅருள் மையினால் உனது உண்
மைவச மாக்கினை அருணாசலா

மை - கண்ணில் பெண்கள் தீட்டிக் கொள்வது, வசிய மருந்து, கருமையைக் குறிப்பது
மயல் - மனமயக்கம்,  உண்மைவசம் -முழுமையான ஆன்ம உணர்வு

இருள் நிறைந்த  அகந்தை மயக்கத்தை, உன்னுடைய ஒளி பொருந்திய அருள் மையினால் நீக்கினாய்.
அதனால் எனது அகந்தையிருள் நீங்கிற்று. பிறகு என்னை உன் மெய்யுணர்வு அறியுமாறு செய்து என்னை ஆட்கொண்டனையே அருணாசலா.

மை வைத்து விட்டான் என்று சொல்லக் கேட்கிறோம். இங்கு அருணாசலனே தன் அன்பனின் மன மயக்கத்தை நீக்கித் தன் அருள் காட்டி அவனைத் தன் வசமாக்கிக் கொள்கிறான் என்கிறார். நாம் இறைவனிடம் அன்பு செலுத்தலாம். ஆனால் இறைவனே நம்மிடம் அன்பு செலுத்துவானானால் அதை விடப் பேரின்பம் என்னவாக இருக்க முடியும்? இதையே ஶ்ரீ ரமணர், வள்ளலார் வாழ்விலிருந்து அறிகிறோம்.



6 August 2014

83. அருணாசல அட்சர மணமாலை

மேன்மேல் தாழ்ந்திடும் மெல்லியர் சேர்ந்துநீ
    மேன்மை  யுற்றனைஎன் அருணாசலா

மேன்மேல் -மேலும்மேலும், தாழ்ந்திடும் - பணியும், மெல்லியர் -எளியவர், மேன்மை - உயர்வு

மீண்டும் மீண்டும் அகந்தையற்றதால் உன்னைப் பணிந்து தொழும் எளிமையான அடியவர்களைச்
சேர்ந்ததால் நீ உயர்வடைந்தாய், என் அருணாசலா.
எல்லாம் வல்ல ஈசனுக்கு உயர்வு, தாழ்வு என்ற பேதங்கள் இல்லை. யாரேயாகிலும் தன்னை முழுதுமாக சமர்ப்பிக்கும்  அன்பருக்கு அருள் செய்வான். மீண்டும் இறைவனுக்கு ஏது மேன்மையும், தாழ்வும்?
தன்னைப் பணியும் அன்பர்களால் அவன் மேன்மையாக்கப் படுகிறான்!

தாழ்ந்த நிலத்தில்தான் தண்ணீர் சேர்ந்து நிற்கும். அதுபோல பணிவுடையவர் உள்ளத்தில் அருள் நிறைந்து இருக்கும். எதனால்? அகந்தையற்றவர் மனதில்தான் பணிவு வரும்.
''பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
  அணியுமாம் தன்னை வியந்து'' என்ற வள்ளுவர் வாக்கை நோக்குக.




5 August 2014

82.அருணாசல அட்சரமணமாலை

மெய்யகத் தின்மன மென்மலர ணையினான்
  மெய்கலந்திட அருள் அருணாசலா

(மெய் அகத்தின் மன மென் மலர் அணையில் நான்
மெய் கலந்திட அருள் அருணாசலா)

மென்மையான மலர்கள் தூவப்பட்ட பஞ்சணை! எங்கிருக்கிறது? ஆழ்மனதே பஞ்சணை. அமைதி எனும் மலர்கள் நிரம்பியிருக்க இறையுணர்வோடு, தன்னைத் தான் அறிந்த விழிப்புணர்வு இரண்டறக் கலந்துவிட அருள்வாய் அருணாசலா.
மெய் அகம் - ஆன்மா
இந்த ஊனுடம்பே ஆலயம், உள்ளம் பெருங் கோயில்! எண்ணங்களற்ற பெரு வெளியில், தன்னைத் தான் இழந்து மெய் மறந்து சும்மா இருப்பதே சுகம்!

4 August 2014

81. அருணாசல அட்சர மணமாலை

மூக்கிலன் முன்காட்டு முகுரமா காதெனைத்
  தூக்கி யணைந்தருள் அருணாசலா

மூக்கு இலன் முன் காட்டும் முகுரம் ஆகாது என்னைத்
தூக்கி அணைந்து அருள் அருணாசலா


மூக்கிலன் - மூக்கில் குறைபாடுடையவன்
முகுரம் - கண்ணாடி

மூக்கில் குறைபாடுடையவனை மூக்கறையன் என்பார்கள். அவன் முன்னால் முகம் பார்க்கும் கண்ணாடியைக் காண்பித்தால் தன் அங்கக் குறையை எண்ணி மிகவும் வருந்துவான்.

அருணாசலனே! நான் அகந்தை மிகுதியாலும், ஐம்புலக் கள்வர்களின் ஆதிக்கத்தாலும்
பல குறைகளை உடையவன்.  நீயே என்னை பிரதிபலிக்கும் கண்ணாடி!

என் அருட் குருவாய் விளங்கும் உனக்கு என்னைப் பார்த்தவுடனேயே என் குற்றங்குறைகள் எல்லாம் தெரியும்!
அதனைக் காட்டி என்னை கேலி செய்யாமல், பொருட்படுத்தாமல் என்னைத் தூக்கி அணைத்துக் கொள்! என்னைத் திருத்து. உன் அருளுக்கு ஏற்றவனாய் என்னை ஆக்குவிப்பாய்.

''குற்றம்புரிதல் எனக்கு இயல்பே, குணமாக்கொளல் உன் கடமை,'' என்பார் வள்ளல் பெருமான்.








3 August 2014

80. அருணாசல அட்சரமணமாலை

முடியடி காணா முடிவிடுத் தனைநேர்
   முடிவிடக் கடனிலை அருணாசலா

முடி - அகந்தையாகிய சிக்கல் முடிச்சு
காணாமுடி - ஆன்ம வடிவம்
நேர்விடுத்தனை - நேரிடையாக சேர்ப்பித்தாய்
கடனிலை - கடமை அல்லவா
அனை நேர்- அன்னைக்கு நிகராக

அன்னைக்கு நிகரான அருணாசலனே!  ஆரம்பமும், முடிவும் அற்ற உன்னைக் காணத் தடையாக இருந்த சிக்கலான அகந்தை முடிச்சை அவிழ்த்து நீக்கி, நேரிடையாக உன்னை வந்து அடையும்படிச் செய்தாய்.

பிரமனும், திருமாலும் முயன்றும் காண இயலாத உன்னுடைய திருவடிவைக் காணுமாறு என் அஞ்ஞானத்தை நீக்கி அருள் புரிந்தாய்!

''ஆதியனே அந்தம் நடுவாகி நின்றானே,'' ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் சோதியை யாம் பாட,'' என்கிறது திருவாசகம்.

''படிஅடி வான்முடி பற்றினும் தோற்றா
அடிமுடி எனும்ஓர் அருட்பெருஞ் சோதி'' - அகவல், திருவருட்பா, வள்ளலார்.




2 August 2014

79. அருணாசல அட்சரமணமாலை

மீகாமன் இல்லாமல் மாகாற்று அலைகலம்
   ஆகாமல்காத்து அருள் அருணாசலா

மீகாமன் - மாலுமி, கப்பலைச் செலுத்துபவன்
மாகாற்று - புயற்காற்று
அலைகலம் - அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்படும் கப்பல்
வாழ்க்கை - கடல்
உடல் - கப்பல்
உடலின் மாலுமி - அருணாசலன்

நடுக்கடலில் செல்லும் கப்பலின் மாலுமியைக் காணவில்லை. இறந்து விட்டான் போலும்! கடுமையான புயற்காற்று வீசுகிறது. அலைக்கழிக்கப்படும் கப்பல் செலுத்துவாரின்றித் தவிக்கிறது!
என்னுடைய வாழ்வும் வாழ்க்கைக் கடலின் இன்ப துன்ப அலைகளால் அலைக்கழிக்கப்பட்டுத் திண்டாடுகிறது! என்னுடைய உடலாகிய கப்பலின் பார்த்த சாரதி, மாலுமி, வழிகாட்டி, தந்தை, தாய், குரு  அனைத்தும் நீயேயன்றோ? 'நான் யார்?'  என்ற ஆன்ம விசார திசைகாட்டி கொண்டு  என்னை வழி நடத்துவாயாக!



1 August 2014

78.அருணாசல அட்சர மணமாலை


மிஞ்சிடிற் கெஞ்சிடுங் கொஞ்ச அறிவன்யான்
   வஞ்சியாது அருளெனை அருணாசலா

அப்பனே அருணாசலா! மிகுந்த துன்பம்  என்னை வருத்தினால், போதும் இது போதும், இனி என்னைச் சோதியாதே என்று உன்னைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்ளக் கூடிய சிற்றறிவு உடையவன் நான்!
மிகுந்த இன்பமோ, துன்பமோ எப்போதும் உன்னையே தஞ்சமாய்க் கொள்ளும் பேரறிவு எனக்கில்லை ஆயினும் என்மீது கோபம் கொள்ளாது  எபோதும் எனக்கு நீ அருள் புரிதல் வேண்டும்.

அருணாசல அருட்பெருஞ் சோதி வாழ்க.  

31 July 2014

77. அருணாசல அட்சர மணமாலை

மானங் கொண் டுறுபவர் மானத்தை அழித்துஅபி
 மானமில் லாதொளிர் அருணாசலா

மானம் என்பது உடற்பற்று, பொருட்பற்று, உலகப் பற்று. இப்பற்றுகளை அழித்து தன்னை நாடிவருவார்க்கு பற்றின்மையையும், பணிவையும் அளித்து ஒளிர்கின்றவன் அருணாசலன்.

இறைநாட்டம் உடையவர்க்கு  மான அபிமானங்கள் இல்லையாம்.

30 July 2014

76. அருணாசல அட்சர மணமாலை

மலை மருந்திட நீ மலைத்திடவோ அருள்
   மலை மருந்தாய் ஒளிர் அருணாசலா

மலைத்தல் - திகைப்புறல், மயங்குதல், மலை மருந்து - மலைப்புக்கு மருந்து, மலையாகிய மருந்து

மலை மருந்து,  ஒளிர் மருந்து, அருள் மலை,  மருந்து மலை, ஒளிர் மலை, அருணாசலம்!
நம் நாட்டிற்குப் பெருமை சேர்ப்பது இமய மலை. இமவானின் மகள், மலைமகள் உமாதேவியார்.
பர்வத புத்திரியை இடப்பாகம் கொண்டதால் அம்மையப்பனாய்த் திகழ்பவன் சிவன்.

அண்ணாமலை வடிவில் பிறவிப் பிணி தீர்க்கும் மருந்தாய், ஞானச் சுடராய்த் திகழ்பவனே!
எனது அகந்தைப் பிணியைத் தீர்க்கும் மருத்துவனாய் இருப்பதற்கு நீ மலைக்காலாகுமோ?
விரைவில் அருள் செய்!

எனது அகந்தையை  அழிக்கும் மருந்தாகிய ஆன்ம விழிப்புணர்வை  எனக்கு நீ அருளிய  பின்னும் நான் மயங்குவேனோ? மாட்டேன்.

மலை மருந்தாகிய  உமாதேவியார் இடப்பாகத்தில் வீற்றிருக்க எனக்கு அருள் செய்ய நீ தயங்கலாமா?

மனிதர்களின் பிறவிப்பிணி தீர்க்கும் மருந்து இறைவனே.




29 July 2014

75. அருணாசல அட்சரமணமாலை

பெளதிகமாம்  உடல் பற்றற்று நாளுமுன்
    பவிசுகண் டுறவருள் அருணாசலா

 பஞ்ச பூதங்களாகிய  மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றால் ஆனது மானிட உடல். பஞ்சேந்திரியங்களும் நம் உடலுக்கு அவசியமாகின்றன. அதனால் நான் என்பது உடல், உடலின் அழகு, குடிப்பிறப்பு, செல்வம், புகழ், உறவுகள் ஆகியவையால் உண்டாகும் எனது, என்னுடைய என்ற அகங்காரம் ஏற்படுகிறது. எனவே இந்த உடல் மீது நான் கொண்டுள்ள பற்றினை நீக்கி நாள்தோறும் உன்னுடைய செவ்விய திருவருள் இன்பத்தைத் துய்க்க அருள் புரிவாய் அருணாசலா.

உடல் இல்லாமல் 'நான் ஏது' என்ற கேள்வி உண்டாகிறது! இந்த 'நான் யார்' என்ற கேள்விக்கு, பதில் காண முயலும் போது இந்த உடம்பு மட்டுமே 'நான் அல்ல', அதற்கும் மேற்பட்ட ஒன்று என்பது தெளிவாகும்.  இந்த உடலைத் தாண்டி 'தான் யார்' என்பதை அறிவதே இறைவன் மனிதர்க்கு வைத்துள்ள தேர்வாகும்!

கந்தரனுபூதியில் அருணகிரிநாதர்,''விதிகாணும் உடம்பை விடா வினையேன்
கதிகாண மலர்க் கழல் என்றருள்வாய்,'' என்றும், ''மெய்வாய் விழிநாசி யொடும் செவியாம் ஐவாய் வழி செல்லும் அவாவினை ஒழிவாய், கதிர்வேல் முருகன் கழல் பெற்றுய்வாய்,'' என்கிறார்.
உடல் எடுத்ததன் பயன் இறைவனை அறிதலேயாகும்.
  

28 July 2014

74. அருணாசல அட்சரமணமாலை

போக்கும் வரவுமில் பொதுவெளியினில் அருட்
      போராட்டம் காட்டு அருணாசலா

போக்கும் வரவும் - தோன்றி மறைதல்.
இல் பொது வெளி - இல்லாத பரவெளியில்
அருட் போராட்டம் - நன்மைக்கும் தீமைக்கும் இடையே நடக்கும் போர்
முடிவில் வெற்றி பெறுவது சிவனருட் சக்தியே!

தோன்றி மறைதல் இல்லாத இறைவன் சிவப்பர வெளியினில் ஆனந்தத்திருநடனம் புரிகின்ற காட்சியைக் காணவேண்டுகிறார் மகரிஷி.
அகந்தை அழிதலும், ஆன்ம விழிப்புணர்வுக்கும் இடையே நடப்பதே போராட்டம்.

இந்தப் போராட்டத்தில் வெற்றி பெறவே பல கட்டுப் பாடுகளுடன் யோக வாழ்வை மேற்கொண்டு
சாதனைகள் செய்கின்றனர் யோகியர்.

எண்ணங்கள் தோன்றித் தோன்றி மறைகின்றன. நன்கு கவனித்து  ஒரு எண்ணம் தோன்றி
மீண்டும் மற்றொரு எண்ணம் தோன்றும் இடை வெளியில் ஆழ்ந்து மனதை நிறுத்தினால், அது
நம்மை அமைதியில், ஆனந்தத்தில் ஆழ்த்தும்! இதுவே பொது வெளி! இந்தப் பொது வெளியில்
 உலக எண்ணங்கள் நம்மை ஒரு புறம் இழுக்க, ஆனந்த அனுபவம் மற்றொரு பக்கம் ஈர்க்க  ஒரு போராட்டம் நிகழ்கிறது. இதனை நிகழ்த்தி நம்மை ஆட் கொள்பவன் அருணாசலன்.





27 July 2014

73. அருணாசல அட்சரமணமாலை

பொடியான் மயக்கியென் போதத்தைப் பறித்துன்
      போதத்தைக் காட்டினை அருணாசலா

பொடி - சொக்குப் பொடி( நயமாகப் பேசி நம்ப வைப்பது))
போதத்தைப் பறித்து - அறிவைப் பறித்து
போதத்தைக் காட்டினை - ஞானத்தை தந்தனை

சொக்குப் பொடி போட்டு உன் திருநாமத்தால் என்னை மயக்கினாய்!
உலக விஷயங்களில் நின்று நிலைதடுமாறும் என் அறிவைப் பறித்துக் கொண்டாய்.
ஆன்ம ஞானமாகிய பேருண்மையை எனக்கு காண்பித்தாய்.

அருணாசல நாமம் காதில் விழுந்தவுடன் தனக்கு விவரிக்க இயலாத இன்பம் தோன்றியதையும்,
அண்ணாமலை வந்து ஆன்ம ஞானம் பெற்றதையும் இக்கண்ணிகளால் உணர்த்தினார்.


26 July 2014

72. அருணாசல அட்சர மணமாலை


பைங்கொடி  யாநான் பற்றின்றி வாடாமற்
பற்றுக்கோ டாய்க்கா அருணாசலா

பைங்கொடி நான், பற்றுக்கோடு  நீ!
பசுமையான கொடிக்குப் பற்றிப் படர பந்தல் இல்லாவிடினும், ஒரு கொம்பாவது தேவை.
அது போல எனக்கு, என் வாழ்வுக்கு ஆதாரமாய், துணையாய் என் வாழ்வைப் பயனுள்ளதாகச் செய்து
எனைக் காப்பாய்  அருணாசலா.
'தாவிப் படரக் கொழுகொம்பு இல்லாத தனிக் கொடி போல் பாவித் தனிமனம் தள்ளாடி வாடிப் பதைக்கின்றதே" என்று அருணகிரியின் கந்தரலங்காரப் பாடல் நெஞ்சை நெகிழ்விக்கின்றது!



25 July 2014

71.அருணாசல அட்சர மணமாலை

பேய்த்தனம் விடவிடாப் பேயாய்ப் பிடித்தெனைப்
     பேயனாக்கினை யென் அருணாசலா

பேய்த்தனம் விட - அகந்தைப் பேய் என்னை விட்டு அகல
விடாப்பேய் - என்றும் விட்டு அகலாத அருணாசலப் பித்து
பேயனாக்கினை - உன்மீது பைத்தியமாக்கினை

அருணாசலனே! அகந்தைப் பேய் என்னை விட்டு அகலவும், உன்மீது பக்திப் பித்து என்னைப் பீடிக்கவும்,
நான் உன் மீது பைத்தியமானேன்.

அவரே வியப்புறும் வகையில் அவருக்கு ஆன்ம ஞானம் நொடிப் பொழுதில் சித்தித்ததை இவ்வாறு ஶ்ரீ ரமணர் குறிப்பிடுகிறார். 

24 July 2014

70. அருணாசல அட்சரமணமாலை

பெயர் நினைத்திடவே பிடித்திழுத்தனை உன் 
           பெருமை யாரறிவார் அருணாசலா

நினைத்தாலே அருணாசல நாமம் சொன்னாலே   முக்தியருளும் பெருமையுடைத்து திருவண்ணாமலை.

அருணாசலம் என்ற உன் பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே நான் உன்பால் ஈர்க்கப்பட்டேன்.
காந்தம் இரும்பைக் கவர்வதுபோல நீ என்னைப் பிடித்து உன்பால் சேர்த்துக் கொண்டனை.
உன் பெருமையை யாரே எடுத்துச் சொல்ல வல்லவர்? யாரும் இல்லை .

''அருணாசலமென அகமே நினைப்பவர் அகத்தை வேரறுப்பாய்'' என்றுதானே தொடங்கினார்?
அருணாசலத்தை நினைத்தாலே ஆண்டவன் அருள் கைகூடும்.

23 July 2014

69. அருணாசல அட்சரமணமாலை

பூமண மாமனம் பூரண மணங்கொளப்
   பூரண மணம் அருள்  அருணாசலா

உலக விஷயங்களிலேயே நிலைத்திருக்கிறது  பூவின் வாசனையொத்து விளங்கும் மனித மனம்.
இம்மனமானது முழுமையானவனாய் விளங்கும் இறைவனை உணர்ந்து கொள்ளும் போது முழுமையடைந்து பிரகாசிக்கிறது. இத்தகைய முழுமையான, இரண்டறக் கலந்து நிற்கும் உன்னத நிலையடைய அருள் புரிவாய் அருணாசலா.
அட்சரமணமாலை இந்தப் பூரணத்துவ நிலையை அடைய விரும்பும் அன்பர்களுக்கு வரப் பிரசாதம்.

ஈசாவஸ்ய உபநிஷதத்தின் மந்திரம் இதோ;
''ஓம் பூர்ணமத:பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே
    பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேமாவ சிஷ்யதே||
இறைவன் முழுமையானவர். இந்த உலகம் முழுமையானது. முழுமையான இறைவனிலிருந்தே முழுமையான உலகம் தோன்றியுள்ளது. முழுமையிலிருந்து முழுமையை எடுத்த பின்பும் முழுமையே எஞ்சியுள்ளது.( ஈசாவாஸ்ய உபநிஷதம், ஶ்ரீராம கிருஷ்ண மடம் வெளியீடு)

வள்ளல் பெருமானின் ஆறாம் திருமுறை, அனுபவ மாலைப் பாடலைப் பாருங்கள்.சிவபோக அனுபவத்தை  தலைவி, தோழி கற்பனைப் பாத்திரங்கள் மூலம் விளக்கும் ஆனந்த மயமான பாடல்.

''அம்பலத்தே திருநடஞ்செய் அடிமலரென் முடிமேல்
 அணிந்து கொண்டேன் அன்பொடுமென் ஆருயிர்க்கும் அணிந்தேன்
எம்பரத்தே மணக்கும் அந்த மலர்மணத்தைத் தோழி
என் உரைப்பேன் உரைக்க என்றால் என்னளவன் றதுவே''

பிறவியின் பயன் இறைவனை அறிதலும், அவனை அடைதலும் ஆகும்.
அருட்பெருஞ்சோதி அருணாசலம் வாழ்க.

















22 July 2014

68.அருணாசல அட்சரமணமாலை

புல்லறிவு ஏதுரை நல்லறிவு ஏதுரை
   புல்லிடவே அருள் அருணாசலா

புல்லறிவு - மயக்கத்தைத் தரக்கூடிய பொய் உணர்வு, சிற்றறிவு, அஞ்ஞானம், அறியாமை
நல்லறிவு - மெய்யுணர்வு, ஞானம், பேரறிவு, தன்னைப் பற்றி விசாரித்து அறிந்த ஆன்ம ஞானம்

உன்னோடு இரண்டறக் கலந்து மெய்யறிவு அடைந்தபின், பொய்யறிவு, நல்லறிவு என்ற பேதங்கள் ஏது?
சொல்வாய் அருணாசலா. ஆன்ம அறிவு எது என்ற தெளிவு ஏற்பட்ட ஒருவனுக்கு நன்மை தீமை என்ற வேற்றுமைகள் இல்லை.

21 July 2014

67. அருணாசல அட்சர மணமாலை

பீதியில் உனைச்சார் பீதியில் எனைச் சேர்
     பீதி உன்றனுக்கு ஏன் அருணாசலா

பீதி +இல் - பயம் இல்லாத, பீதி - அச்சம்

அகில உலகங்களையும் ஆளும் பரமனுக்கு ஏது அச்சம்?  அச்சமற்ற உன்னை, வந்து சேர வேண்டும் என்று நான் ஆசைப் படுகிறேன். (பீதி இல் எனைச் சேர்)என் பயத்தைப் போக்கி என்னை உன்னுடன் சேர்த்துக் கொள்வாயாக.  என் அகந்தையை அகற்றி அருள்புரிவாயாக. அருணாசலா!

அருணாசல நாமத்தைக் கேட்டவுடன் சகலத்தையும் துறந்து , எந்த பயமும் இன்றி அண்ணாமலையை அடைந்து அருட் பேறு பெற்ற மகரிஷியின் வாழ்க்கையைக் குறிக்கிறது இக்கண்ணிகள்.   

20 July 2014

66. அருணாசல அட்சரமணமாலை

பித்துவிட்டுனை  நேர் பித்தனாக்கினை அருள்
     பித்தந் தெளி மருந்து  அருணாசலா

பித்து - மிகுந்த ஈடுபாடு, அறியாமை, பைத்தியம்.
பித்தம் -கல்லீரலில் சுரக்கும் நீர், மயக்கம்
பித்தன் - சிவபெருமான்

பித்தம் என்பது கல்லீரல் நோய். விரைவில் நீங்காதது. அது போல பொருட் பித்தும், காமினி, காஞ்சனப் பித்தும் விரைவில் நீங்காதது ஆகும். பிடித்தால் விடாதது.

மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் பொருட்கள் மீது பற்று உண்டு. அது அளவுக்கு மீறிப் போகும்போது அதனை, 'பித்துப்பிடித்து அலைகிறான்/ள்' என்கிறோம்.

இந்த உலகப் பொருட்கள் மீது  அதிகமான ஆசைவைத்து அலைகின்ற எளியவனான என்னுடைய
பித்தத்தை நீக்கினாய். ஆனால் பித்தத்தை நீக்கிய உன் மீது நான் பித்தனானேன்!'பித்தா பிறை சூடி'என உன்னையே எண்ணினேன். நீயோ பொருட்பித்தையும், உன்மீது ஏற்பட்ட பக்திப் பித்தையும் நீக்கும் மருந்தாகி என் சித்தந்தெளிவித்தாய் அருணாசலா!

'பித்தப் பெருமான் சிவபெருமான்,பெரிய பெருமான் தனக்கருமைப் பிள்ளைப் பெருமான்,' என முருகப் பெருமானைப் போற்றும் வள்ளல், ''நல்ல மருந்து இம்மருந்து-சுகம் நல்கும் வைத்தியநாத மருந்து
அருள்வடிவான மருந்து,''என்று சிவனே மருந்து என்று பாடுகிறார்.

'


19 July 2014

65. அருணாசல அட்சரமணமாலை

பார்த்தருள் மாலறப் பார்த்திலை யெனின் அருள்
    பாருனக் கார் சொல்வார் அருணாசலா

அருணாசலனே! என்னை உன் அருட் பார்வையால் பார்த்து, அகந்தை மயக்கத்தை நீக்குவது  உன் கடமை! உன் கருணை நிறைந்த பார்வையை என் மீது திருப்பவில்லையென்றால் உன்னிடம் யார் எடுத்துச் சொல்வார்கள்?
எதை எடுத்துச் சொல்ல வேண்டும்? கருணை செய்தல் வேண்டும் என்பதை!

'பார்த்திலை' என்ற சொல் 'பார்த்தாய்' என்ற பொருளிலும்  வரும்.
உன் அருட்பார்வையால் என் அகந்தை மயக்கத்தை நீக்கி அருளினையே. உன் திருவருளின் பெருமையை எவ்வாறு எடுத்துச் சொல்வேன் அருணாசலா!

இறைவனின் அருட்பார்வை இருந்தால்,''எல்லாம் செயல் கூடும் என் ஆணை அம்பலத்தே எல்லாம் செய வல்லான் தனையே ஏத்து,'' என்கிறார் வள்ளலார்.


18 July 2014

64.அருணாசல அட்சரமணமாலை

பற்றிமால் விடத்தலை யுற்றிறு முனம் அருள்
  பற்றிட வருள் புரி அருணாசலா

(மால் விஷம் பற்றி தலை உற்றிடும்  முன்னால்  - மால் - மயக்கம்; மால்  விஷம் - மயக்கம் தரக்கூடிய அகந்தையாகிய நஞ்சு;)
 நான், என், எனது, என்னால், என்னுடைய என்ற மயக்கத்தால் உண்டாகும் அகந்தை நஞ்சு தலைக்கு ஏறி என்னை அழிக்கும் முன் உன் அருளாகிய அமுதம் என்னை அடைய அருள் புரிவாயாக.
அகந்தை - விஷம்;அருள் - அமுதம்.
என்னால்தான் எல்லாம் நிகழ்கின்றன என்ற எண்ணம் மயக்கத்தைத் தரும். அதனால் கர்வம் உண்டாகிறது. 'கர்வம் தலைக்கேறிவிட்டது' என்கிறோம்!

வள்ளல் பெருமான் சொல்கிறார், ''ஒருவனுடைய முதல் மனைவி: ஆணவம்! அவளது பிள்ளை அஞ்ஞானம்.
இரண்டாவது மனைவி மாயை. மாயையின் நான்காவது பிள்ளை அகங்காரம். அவனது இயல்பு என்ன?
அவன் செயலை கருதவும் பேசவும் வாய் கூசும். எல்லா ஆற்றலும் என்பால் உளதெனத் தருக்குவன், தன்னைத்தானே மதிப்பன், தரணியிற் பெரியார் தாம் இல்லை என்பான், தானே பிறந்த தன்மையிற் பேசுவன், விடியும் அளவு வீண்வாதிடுவன், சொல்லினுங் கேளாத் துரியோதனன் என வானவர் தமக்கும் வணங்கா முடியன்.''  ( திருவருட்பா ஆறாம் திருமுறை)

17 July 2014

63. அருணாசல அட்சரமணமாலை

நோக்கியே கருதி மெய்தாக்கியே பக்குவம்
ஆக்கி நீ ஆண்டருள் அருணாசலா

(நோக்கி - பார்த்தல்; கருதி -எண்ணுதல் செய்; தாக்கு -மோது, எதிர், தீண்டு; பக்குவம் தகுதியுடையதாகச் செய்தல், முதிர்ச்சி;)

அருணாசலனே, நீ உன் அருட் கண்கள் கொண்டு என்னைப் பார்த்தாய்.
கருணையுடன் இவன் நமக்கு உரியவன் எனக் கருதினாய்.
என் உடலினை ஆளும் ஐம்புலன்களாகிய கள்வர்களைத் தாக்கி அழித்தாய்.
உன்னுடைய அருட் சக்தியைத் தாங்கிக் கொள்ளும் பக்குவம் உடையோனாய் என்னை ஆக்கினாய்.
என்னை உனக்கு அடிமையாக்கி ஆண்டு கொண்டாய்.
ஐயனே உன் கருணையே கருணை!

 சரியாக பக்குவம் செய்யப்படாத உணவினை உண்ண முடியாது! அதுபோல மனப் பக்குவம் அடையாத மானுடர்களால் இறைவனின் அருட் சக்தியை இப் பூத உடலில்  தாங்க முடியாது. அதனால்தான் தகுந்த குருவின் மேற்பார்வையில் யோக வாழ்வை மேற்கொள்ள வேண்டும் எனச் சொல்கிறார்கள்.

'ஆண்டருள் ' என்ற சொல் 'ஆண்டு அருள் செய்தாய்' எனவும், 'உன் பக்தர்களுக்கு அருள் செய்
 என்ற பொருளிலும் வருதல் காண்க.

'நோக்குதல்' என்ற சொல் திருக்குறள் - குறிப்பு அறிதல் அதிகாரத்தில் 16 முறை வருகிறது.

'அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்,' என்ற கம்பனின் வரிகளை அறியாதார் யார்?

வள்ளல் பெருமானோ  மூன்றாம்  திருமுறைப் பாடலான 'நெஞ்சறிவுறுத்தலில்' சிவபெருமானின் செம்மேனியழகை வர்ணிக்கும்போது,''தேர்ந்தவர்க்கும் நோக்கரிய நோக்கழகும் நோக்கார் நுதலழகும்,''
என்று ஆனந்தப் படுகிறார்.

16 July 2014

62. அருணாசல அட்சரமணமாலை

நொந்திடாது உன்றனைத் தந்தெனைக் கொண்டிலை
      அந்தகன் நீ எனக்கு அருணாசலா

நொந்திடாது - சலித்துக் கொள்ளாமல்; கொண்டிலை - கொண்டாய்; அந்தகன் - எமன்

அருள் நகையிட்டு, தாணுவாய் நின்று,என்னை இன்பமயமாக்கி, எண்ணங்கள் அற்றுப் போகச் செய்து,
பதமான கனியாய் விளங்கிய என்னை ஏற்றாய்!

என்னைப் பார்த்து சலித்துக் கொள்ளாமல் உன் அருளால் என்னை ஆட்கொண்டாய். என் ஐம்புலன்களால் ஏற்பட்ட அகந்தைக்கு நீ காலனானாய்.

''குற்றம் செய்தல் எனக்கு இயல்பே, குணமாக்கொள்ளல் உனக்கு இயல்பே'' என்பார் வள்ளலார்.
இறைவனது அருளைப் பெறவும், ஒரு தகுதி வேண்டும். தகுதியுடையவனாகச் செய்வதும் அவனே!
அவனருள் இருந்தால் அவனைப் பெறலாம்!




15 July 2014

61. அருணாசல அட்சரமணமாலை

61. நைந்துஅழி கனியால் நலன்இலை பதத்தின்
            நாடி உட்கொள் நலம் அருணாசலா

அருணாசலனே!
நினைந்து, உணர்ந்து,  அகம்குழைந்து உருகி உன்னைச் சரணடைந்தேன்.
 என் உள்ளக் கனியானது நீஆட்கொள்ள தகுதியுடையதாக இருக்கிறது.
நீ அதனை ஏற்றுக் கொண்டு அருள்வாயாக!
நைந்து அழுகிப் போன கனி எதற்கும் பயன்படாது.
அதுபோல எனக்கு அருள் செய்ய நீ காலம் தாழ்த்தினால் என் வாழ்வும் வீணாகிவிடும்.
எனவே அருள்செய்வாயாக.
அழுகிய கனியால் பயன் இல்லாதது போல பக்தி நெறியினின்று வழுவி, ஐம்புலன்களின் ஆதிக்கத்தில் என் மனம் அடங்குமானால் இந்தப் பிறவியால் பயனில்லை.
'நாடி உட்கொள்' -நீயே என்னைத் தேடி வந்து ஆட்கொள்வாயாக.

14 July 2014

60. அருணாசல அட்சர மணமாலை

நேசமில் எனக்கு உன் ஆசையைக் காட்டிநீ
     மோசம் செய்யாதருள் அருணாசலா

உன்மீது எனக்கு சிறிதும் நேசம் அதாவது அன்பு இல்லாதிருந்தது.என்றாலும்
உன் மீது பக்தி செய்ய வைத்து அருள் செய்தாய்  அருணாசலா.

'ஆசை காட்டி மோசம் செய்தல்' என்று சொல்லும் வழக்கம் நம்மிடையே  இருக்கிறது. இது தினசரி வாழ்வில் காணப்படும் ஒன்றே. நாம் விரும்பத ஒன்றைத் தருவதாகக் கூறி பிறகு அதனைத் தர முடியாது என்று சொல்பவரை மோசம் செய்தான் என்கிறோம்.

இங்கு ஶ்ரீ ரமணர் உன்னை அறியாதிருந்த வயதில் உன்னைக் காண்பித்து, ஆசையை உண்டாக்கி
மோசம் செய்யாமல் அருள் செய்தாய் என்றும், மற்றுள பக்தர்களுக்கும் அருள் செய்ய வேண்டும் என்றும் இறைஞ்சுகிறார்.


12 July 2014

58.அருணாசல அட்சர மணமாலை

நூலறி வறியாப்  பேதையன் என்றன்
    மாலறி வறுத்தருள் அருணாசலா

(நூலறிவு - புத்தகங்களைப் படிப்பதால் வரும் அறிவு; மாலறிவு -குழப்ப அறிவு, அரைகுறை அறிவு; மால் - மயக்கம்.)
எந்த நூல்களையும் கற்றறியாத எனக்கு ஆன்ம ஞானத்தை அருளிய அருணாசலனே, உம்மை வணங்குகிறேன்.
ஆன்ம ஞானம் தரக் கூடிய நூல்கள் எதனையும் படித்து அறியாத பேதைமை உடையவன் நான். என் மனதினால் எனக்குள்ள அரை குறை அறிவினை நீக்கியருள் அருணாசலா.( இது பக்தர்களுக்கு)

புத்தகங்களைப் படிப்பதனால் ஆன்ம அறிவு உண்டாவதில்லை. அவை நமக்கு சந்தேகங்களையும், நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்துகின்றன. 
ஸ்ரி ராமக்ருஷ்ண பரம ஹம்சர் கல்வி கற்றவர் அல்ல. அவருடைய தூய உள்ளத்திலிருந்து தோன்றிய தெய்விகச் சொற்களைக் கேட்டு இன்புற்றது மானுடம்.

நூல்களைப் படிக்காமலேயே எனக்கு அனைத்தையும் உணரச் செய்த அருட்பெருஞ் சோதியே என்பார் வள்ளலார்.
'ஓதாது உணர்ந்திட ஒளி அளித்து எனக்கே ஆதாரமாகிய அருட்பெருஞ் சோதி' - அகவல்

11 July 2014

57. அருணாசல அட்சரமணமாலை

நுண்ணுரு உனையான் விண்ணுரு நண்ணிட
      எண்ணலை இறும் என்ற அருணாசலா

நுண்ணுரு - நுட்பமான உரு, ஆன்ம உணர்வு; விண் - ஆகாசம்;  நண்ணுதல் - ஒன்றுதல்;
இறும்- அற்றுப் போகும்.

நுண்மையான ஆன்ம உணர்வான உன்னை நான் மன ஆகாயத்தில் அடைந்து ஒன்றிட
எண்ணங்களாகிய அலைகள் ஓய்ந்து நான் அமைதி அடைவேன் அருணாசலா.
ஒவ்வொரு மனிதனிடத்தும் நுண்மையான அணு வடிவில் ஆன்ம உணர்வாய் விளங்கும்
அருணாசலன் பிரபஞ்சம் முழுமையும் தாங்கி நிற்கும் ஆகாய வடிவினனாகவும் விளங்குகிறான்.

''விண்உறு விண்ணாய் விண்நிலை விண்ணாய்
அண்ணி வயங்கும் அருட்பெருஞ் சோதி''
உறு விண் அணுக்களாகவும்  அவற்றைத் தாங்கி நிற்கின்ற நிலை விண் அணுக்களாகவும்
பொருந்தி அவற்றை இயக்கும் அருட்பெருஞ் சோதியே.
                                                           (  வள்ளலார், அகவல் -விளக்கம் சேலம் திரு. இரா. குப்புசாமி)

  

10 July 2014

56. அருணாசல அட்சரமணமாலை

நீநானறப்  புலி  நிதங்களி  மயமா
      நின்றிடு  நிலையருள்  அருணாசலா

நீ நானற - நீ நான் அற; புலி - புல்லி(இடை எழுத்து குறைந்தது);களி -இன்பம்.

நீ நான் என்பது மறைந்து போய், இருவரும் ஒன்றாகக் கலந்து தினமும்,  சதாசர்வ காலமும்
சச்சிதானந்தத்தில் நிலைத்து நிற்க அருள் புரிவாய்.







9 July 2014

55. அருணாசல அட்சரமணமாலை

நின்னெரி  எரித்தெனை  நீறாக்  கிடுமுன்
                 நின்னருள் மழை பொழி அருணாசலா
கருணைமயமானவன் இறைவன். அவனால் தன் பக்தர்களை எரித்து சாம்பலாக்க முடியுமா?
நம்முடைய மனதில் ஏற்படும் பல்வேறு உணர்வுகளும் நம் உடலின் நாடி நரம்புகளை பாதிக்கின்றன.
ஆன்ம சாதனை புரியும் ஒருவன் சரியான வழிகாட்டும், குருவின் துணை கொண்டே அப்பாதையில் நடக்கமுடியும். இல்லாவிடில் பல பாதிப்புகள் ஏற்படும்.ஆன்ம சாதனையின் உச்சத்தில் உடல் வெம்மையுறும்.

 உன்னை அடைய வேண்டும் என்ற என் தாபத்தால் ஏற்பட்ட உஷ்ணமானது என்னை எரித்து சாம்பலாக்கும் முன் உன் அருள் மழையால் என்னைக் குளிர்விப்பாய் என வேண்டுவதாகச் சொல்கிறது இக்கண்ணி.

நீறு -திருநீறு, விபூதி, வடிவம்


8 July 2014

54. அருணாசல அட்சரமணமாலை

நாணிலை  நாடிட நானாய்  ஒன்றிநீ
   தாணுவா நின்றனை அருணாசலா

குழந்தைகள் ஒளிந்து விளையாடுவார்கள். அந்த விளையாட்டில்  நடுநாயகமாக இருப்பது தாச்சிக் கம்பம்.  அந்தக் கம்பத்தில் சாய்ந்து கொண்டுதான் கண்ணை மூடிக் கொண்டு எண்ணுவார்கள்.
அதைப் போல மனிதர்களுக்குத் தாணுவாக, சாய்ந்து கொள்ளத் தூணாக இருப்பவன் அருணாசலன்!
ஆத்திகனோ, நாத்திகனோ நோய்க்கு மருந்தாய், ஆறுதல் அளிக்கும் நாயகனாய் நிற்பவன்!

அருணாசலனே! என் அகந்தையை விட்டொழித்து, சிறிதும் என் விருப்பத்தைச் சொல்ல வெட்கப்படாமல் உன்னை நாடி நின்றேன். மிகுந்த கருணையுடன் 'நீ'  என்னோடு கலந்து ' நானாகி' உறுதியுடன் நின்றாய். என்ன தவம் செய்தனன் !

நானாய் நாடிட நானாய் ஒன்றி நீ தாணுவாய் நின்றனை? எனக்கு நாணம் இல்லை, அருணாசலா.
உனக்கு ''நாணிலை"? நான் நாடிட நானாய் ஒன்றி நீ தாணுவாய் நின்றனையே?
இறைவனை நாடி அவனாய் ஒன்றி நிற்போம்!

7 July 2014

53. அருணாசல அட்சரமணமாலை

                                     
நகைக்கிட மிலைநின் நாடிய எனைஅருள்
நகையிட்டுப் பார் நீ அருணாசலா 

நகை - பரிகாசமாக சிரித்தல், ஆபரணம்.

அருணாசலனே! நீ யார்? ஆதியன், சோதியன்,காக்கும் காவலன், காண்பரியப் பேரொளி, தில்லைக் கூத்தன்! நானோ உன் கால் தூசு!  அப்படி இருக்கும்போது உன்னைக் காண வேண்டும், அடையவேண்டும், இரண்டறக் கலக்க வேண்டும் என்றெல்லாம் ஆசைப்படுகிறேன் என்று என்னைப்
பரிகாசம் பண்ணிச் சிரிக்க இதுவா நேரம்?
என்னைப் பார்த்து நகைக்காமல், எனக்கு உன் அருளாகிய நகையை, சற்று அணிவித்து அழகு பாரேன்.

இறைவனின் அருள்நகையை அணிந்த அருளாளர்கள் அட்சரங்களால் ஆன மணமாலைகளை அவனுக்கு அணிவித்து அழகு பார்த்தனர். வள்ளலாரின் திருவருட்பா மாலை, அருணகிரியின் திருப்புகழ் மாலை, நாயன்மார்களின் தேவார மாலை, ஆழ்வார்களின் திவ்யப்பிரபந்த மாலை, ஶ்ரீஅரவிந்தரின் 'சாவித்ரி' மாலை எத்தனை எத்தனை சொல்மாலைகள்! அத்தனை மஹான்களின் பாதகமலங்களுக்கும் வந்தனங்கள்.

6 July 2014

52. அருணாசல அட்சரமணமாலை

தோடமில்  நீஅகத்  தோடொன்றி என்றுஞ்சந்
      தோடம் ஒன்றிட அருள் அருணாசலா

தோடம் என்பது 'தோசம்' -'தோஷம்';அகத்தோடொன்றி - அகத்துடன் இரண்டறக் கலந்து;
சந்தோடம் - சந்தோஷம்.

எந்தக் குற்றமும் அற்றவன் நீ! பல குற்றங்களும் குறையும் உள்ளவன் நான்.
அதனால் எனக்கு உன்னோடு ஒன்றுகின்ற சக்தியில்லை. ஆனால் அந்த உரிமை, சக்தி உனக்கு உண்டு.
நீ என்னோடு ஒன்றினால்  மகிழ்ச்சியானது என்னோடு ஒன்றும்! சதா சர்வ காலமும் நான் ஆனந்தத்தில் திளைத்திருப்பேன்!அருள்வாயாக அருணாசலனே!

5 July 2014

51.அருணாசல அட்சர மணமாலை

தொட்டருட் கைமெய் கட்டிடா யெனிலியான்
நட்டமாவேன் அருள் அருணாசலா

கைமெய் - மெய்கை உண்மையான கரங்கள்; கட்டிடாயெனில் -கட்டாவிட்டால், வேரொடு நீக்காவிட்டால்; நட்டமாவேன் - இப்பிறவிப் பயனை இழப்பேன்

அருள் நிறைந்த நின் திருக்கரங்களால் உண்மையான என் ஆன்மாவாய் விளங்கும் பரசிவத்தோடு, அகந்தையை வேரறுத்து என்னைக் கட்டியணைக்காவிடில், சேராவிடில் இந்தப் பிறவியால் என்ன பயன்?

உருவமற்ற இறைவனுக்கு கரங்கள் ஏது? எப்படி மெய்யைக் கட்டமுடியும்?
சூரிய ஒளியினால் எப்படி நமக்கு வெம்மை கிடைக்கிறது?ஒரு மலரில் உள்ள மென்மையான மணம் இருக்கும் இடத்தை நம்மால் காண முடியுமா? அது போல்தான் இறைவனின்'அருட்கை தொட்டு மெய் கட்டும்'.  காணமுடியாது!
''கருத்து மகிழ்ந்து என் உடலில் கலந்து,உளத்தில் கலந்து, கனிந்து உயிரில்கலந்து, அறிவில் கலந்து'' என்று இறையொளி தன்னோடு கலந்த பேரின்பத்தைப் போற்றுவார் வள்ளல் பெருமானார்.

4 July 2014

50.அருணாசல அட்சரமணமாலை

தைரிய  மோடுமுன்  மெய்யக  நாடயான்
   தட்டழிந்தேன் அருள் அருணாசல

அருணாசலனே,
நான் யார் என்பதை நீயே எனக்குக் காட்டிக் கொடுப்பாய்,
'தானே தானே தத்துவம்,
திரும்பி அகந்தனை அகக் கண்ணால் பார்,
உன்னை ஆன்மவிசாரத்தால் துப்பறிந்து கண்டுபிடி, ' என்றவர்,
 தூய மனம், மொழி உடையாருக்கே தரிசனம் தரும் உன் உண்மையான அகம் தோய வேண்டும் என்று சொன்னவர்,
இறைவனே நீ எத்தனை பெரியவன்? பரிபூரணனான உன்னை அடைய தைரியமோடுதான் வந்தேன்! உன்னை மறைத்திருந்த மாயத் திரையை நீக்கி,
என் அகந்தை அழியச் செய்து,  உன் அருளால் உன்னை அடையச்செய்தாய்.

3 July 2014

49. அருணாசல அட்சர மணமாலை

தேடா துற்றநல் திருவருள் நிதிஅகத்
 தியக்கம் தீர்த்தருள் அருணாசலா

நிதி - செல்வம்.
தேடாது உற்ற - தேடி அலையாமல் எனக்குக் கிடைத்த
திருவருள் நிதி - இறைவனுடைய அருளாகிய செல்வம்
அகத்து இயக்கம் - என் மனதின் எண்ணங்களின் வேகத்தை
தீர்த்தருள் - அடக்கி ஆளுதல்

எங்கும் தேடித் திரியாது தமக்கு இறையருள் ஆகிய செல்வம் கிடைத்ததையும்,
எண்ணங்கள் அடங்கி, மனம் அமைதியுற்று ஆனந்தபரிபூரணத்தில் ஒடுங்கியதையும்
இங்கு எடுத்துச் சொல்கிறார்.

2 July 2014

48. அருணாசல அட்சரமணமாலை

தெய்வமென்று உன்னைச்  சாரவே என்னைச்
சேர ஒழித்தாய் அருணாசலா


சார்தல் - புகலடைதல், சரணடைதல்.
தெய்வம் நீயே என்று நான் உன்னிடம் புகலடைந்தேன். என் சரணாகதியை ஏற்றுக் கொண்டு என் அகந்தையை அடியோடு ஒழித்து நானாகிய என்னைத் தானாக்கிக் கொண்டாய் அருணாசலா.

''யானாகி என்னுள் இருக்கின்றாய் என்னேயோ,''  நானாகி என்னுள் நடிக்கின்றாய் என்னேயோ,''
''நான்ஆனான்  தான்ஆனான் நானும்தா  னும்                                                                                              ஆனான்,''  என்று ஆனந்தக் கூத்தாடுகிறார்                                                                                                வள்ளல் பெருமானார்.
                                                                                         

1 July 2014

47. அருணாசல அட்சரமணமாலை

தூய்மன  மொழியர்  தோயுமுன்  மெய்யகந்
     தோயவே  அருள்என்  அருணாசலா

தூய்மையான மனம் உடையவர்களே, தூய இன்சொற்களைப் பேசவல்லவர்.''மனத்துக்கண் மாசிலன் ஆதல்" என்றார் வள்ளுவப் பெருந்தகை.
(தோயுமுன் -தொடுதல் செய், மெய்யகம்- உண்மையான உட்பொருள், ஆன்மா)
தூயமனம் உடையவர்களின் இனிய மொழிகள் உன்னை அலங்கரிக்கின்றன. அத்தகைய உன் ஆன்மாவில் தோய்ந்து ஒன்றுபடும்படி அருள்வாயாக.
பாலில் மோர் சேர்த்தால் இரண்டும் தோய்ந்து தயிராகிறது. அதுபோல என்னை உன் அருட் சக்தியுடன் தோய்த்து, நானே நீயாகும்படி அருள்வாயாக.

30 June 2014

46. அருணாசல அட்சரமணமாலை

துப்பறிவுஇல்லா இப்பிறப்பு என்பயன்
ஒப்பிட வாயேன் அருணாசலா

துப்பறிவு - துப்பு- உளவு செய்யும் அறிவு, இரகசியமாக செய்யப்படும் சோதனை.
ஆராயும் அறிவு இல்லாத இப்பிறப்பால் என்ன பயன்?என் பிறப்பை நான் எதனோடு
ஒப்பிட்டுப் பார்க்க இயலும்?ஒப்பிட சக்தியற்றவன் நான். நீயே விரைந்து வந்து ஒப்பிட்டுப் பார்!

பிறப்பைப் பற்றிய சோதனையா? அதுவும் துப்புத் துலக்க வேண்டுமா? அது என்னவோ?
இன்பமோ துன்பமோ ஒருவன் எப்போதும் அமைதியும் ஆனந்தமும் உடையவனாக
இருக்க வேண்டுமென்றால் தன்னைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். தான் யார் என்ற
ஆன்ம விசாரம் செய்து, 'நான்' என்பது இந்த உடலா, மனமா, உயிரா அல்லது வேறு ஏதாவதா?
என்ற ஆராய்ச்சியே 'துப்பறிவு'. தன்னைத்தான் அறியாவிட்டால் இப்பிறவியால் ஒரு பயனும் இல்லை.என்னை அறிந்து கொள்ள அருள் செய்வாய் அருணாசலா!

29 June 2014

45. அருணாசல அட்சரமணமாலை

தீரமில் அகத்தில் தேடி உந்தனை யான்
   திரும்ப உற்றேன் அருள் அருணாசலா

தானாக நம் அகத்திலே ஒளிரும் ஆன்மப் பொருள் எல்லையற்றது. அது நம்முடனே எப்போதும் இருப்பினும் நாம் அதனை உணர்வதில்லை.
எல்லையற்ற பரம்பொருளாம் உந்தனை என் அகத்திலே தேடி உன் அருளாலே யான் திரும்பவும் அடைந்தேன். அருணாசலனே உனக்கு நமஸ்காரம்.

28 June 2014

44.அருணாசல அட்சர மணமாலை

திரும்பி அகந்தனைத் தினம்அகக் கண்காண்
   தெரியும் என்றனைஎன் அருணாசலா

'தானே தத்துவம் இதனைத் தானே காட்டுவாய்,' என்றார் முந்தைய கண்ணியில்!
அருணாசலர் பதில் சொல்கிறார்;
உனக்குள்ளே மனதைத் திருப்பி உன் உள்முகக் கண்ணால் பார்! தெரியும்!
திரும்பி - உடலைத் திருப்புதல் அல்ல.
அகம்- உள்ளே! உனக்கு உள்ளே, எல்லா எண்ணங்களையும் ஒதுக்கிவிட்டு, அமைதியாய் கவனி

 உலக விஷயங்களைத் தள்ளிவைத்துவிட்டு, உனக்குள்ளே உன்னைத் தேடு!அகக் கண்காண் தெரியும் - தேடியது கிடைக்கும். இதனை உள்ளுணர்வால் உணரமுடியுமே அல்லாது வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

''முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்குத் தாய்தன் மணாளனோ டாடிய
சுகத்தை சொல்லென்றார் சொல்லுமா றெங்கனே''
                                                              - திருமந்திரம்







27 June 2014

43.அருணாசல அட்சர மணமாலை

தானே தானே தத்துவம்  இதனைத்
தானே காட்டுவாய் அருணாசலா

'நான்' என்பது தன்மை ஒருமைப் பெயர்.
'தான்' என்பது படர்க்கை ஒருமைப் பெயர்.

நீ யார்? நான், எனக்கு ஒரு உருவம், பெயர் என்று பல சுட்டுதல்கள் உள்ளன. தான் என்பது என்ன?
அட, தானே எல்லாம் நடக்கும் என்று விட்டுவிட்டேன், என்கிறோம். அதாவது என்னைச் சாராமல், தனித்து நின்று, இயங்காமல் இயங்கும் 'அது' தான் 'தான்'.
''அது என்ற சொல் தத்வமஸி என்ற சாமவேத வாக்கியத்தில் வரும் தத் என்ற பதமாகும். தத்-அது; த்வம் -நீ; அஸி- ஆகின்றாய். இது ஆசாரியன் சீடனுக்கு உபதேசிப்பது.'' கந்தரநுபூதி, க்ருபானந்த வாரியார்.

அதுவாக நீயே ஆகின்றாய்! ''தானே தானே தத்துவம்'' இதனை என்னுள் தானாக நிற்கும் நீயே காட்டுவாய் அருணாசலா.

26 June 2014

42. அருணாசல அட்சர மணமாலை

தத்துவம் தெரியாது அத்தனை உற்றாய்
   தத்துவம் இது என் அருணாசலா


தத்துவம்: உண்மை, மெய்ப்பொருள், பரமாத்மா
தத்: அது, த்வம் - நீ,
அத்தன்: கடவுள், மூத்தோன்
சாதாரணமாக இறைவனப் பற்றிய உண்மைகளை அறிய வேண்டுமானால், அனைத்தையும் துறந்து குருவை அடைந்து, மந்திர உபதேசங்களைப் பெற்று, பன்னெடுங்காலம் சாதனைகள் புரிந்துதான் அறிய முடியும் என்கின்றனர்.
ஆனால் 'அதுவே நீயாகிறாய்' என்ற தத்துவத்தை அறியாமலே இறைவனை அடையச் செய்தாய், இது என்ன புதிய தத்துவம் சொல் என்னுடைய அருணாசலனே!
இது- அருகாமையில் இருப்பதைக் குறிக்கும். இது, தானே அவனாகி நிற்பது.
ஆன்ம அனுபவம் நேரடியான அனுபவம். தெரிந்தது 'இது'. தெரியாதது 'அது'.
தெரியாத 'அது',உன்னிடமே இருக்கும் 'இது'தான்.
தெரியாது என்று நீ நினைக்கின்ற இறைவன் உன்னிடத்திலேயே அருகாமையில் 'தானாக' விளங்குகிறான்.

பல தத்துவங்களைப் பயின்றாலும் இறைவனை அடைய முடியாது. ஆன்ம விசாரத்தால்தான் அறிய முடியும்.




25 June 2014

41. அருணாசல அட்சர மணமாலை

ஞிமிறுபோல் நீயும் மலர்ந்திலை என்றே
   நேர்நின்றனை என் அருணாசலா


ஞிமிறு - வண்டு;
வண்டு தாமரை மலரை நோக்கி வருகிறது. தாமரையோ மலரவில்லை. மலர்ந்தால் தேன் அருந்தலாம்.எனவே மலரைச் சுற்றிச்சுற்றி வருகிறது.

''நீயும் மலர்ந்திலை என்றே நேர் நின்றனை"
என்னுடைய ஆன்மமலர் இன்னும் மலரவில்லை என்று நீயும் வண்டைப் போல் என்னுடைய அகந்தை நீங்கி விழிப்புணர்வு வருவதற்காக காத்திருக்கின்றாய்.

உன்னாலன்றி யாரால் என் இதயத்தை மலர்விக்கமுடியும்? உன் அருளாகிய சூரிய ஒளி என் அகந்தையை நீக்கட்டும். ஆன்ம ஒளி பரவச்செய்யட்டும்.

24 June 2014

40.அருணாசல அட்சர மணமாலை

ஞானம் இல்லாது உன் ஆசையால் தளர்வற
  ஞானம் தெரித்து அருள் அருணாசலா

உன்மேல் ஆசை, ஞானம் இல்லை, தளர்வுற்றேன்!
அருள் கூர்ந்து  ஞானம் கொடுப்பாய்!

இறைவனே உன்னைக் காண வேண்டும், அறிந்து கொள்ள வேண்டும், ஆனந்தத்தில் திளைக்க வேண்டும் என்றெல்லாம் எனக்கு ஆசை. எப்படி என்ற அறிவு எனக்கு இல்லை!எடுத்துச் சொல்லுவாரும்  இல்லை.அதனால் நான் மனம் நொந்தேன், தளர்வடைந்தேன்.
என் தளர்ச்சி நீங்குமாறு எனக்கு அருள் கூர்ந்து                                                                                         ஆன்ம ஞானத்தை கொடுத்து அருள்வாயாக.



23 June 2014

39. அருணாசல அட்சர மணமாலை

ஞமலியின் கேடா(ம்) நானென் உறுதியால்
 நாடி நின்னுறுவேன் அருணாசலா

ஞமலி - நாய்.
மாணிக்க வாசகர்  சிவபுராணத்தில்,
'' நாயிற் கடையாய்க் கிடந்த வடியேற்குத்
      தாயிற் சிறந்த தயா வானதத்துவனே'' என ஈசனை வணங்குகிறார்.

வள்ளல் பெருமானோ,''நாயினுங் கடையேன் ஈயினும் இழிந்தேன் ஆயினும் அருளிய அருட்பெருஞ் சோதி,'' என அகவலில் பரம்பொருளைப் போற்றுகிறார்.

'ஞ'கர மலர் என்ன சொல்கிறது?
அறிவில் நாயினும் கேடானவன் நான்! எப்படி?
நாய் மோப்ப சக்தி ஒன்றையே  கொண்டு மனிதர்களையும், பொருட்களையும் கண்டுபிடிக்கிறது.

ஆனால் மனிதனோ ஐம்புலன்கள் எல்லா பக்கங்களிலும் சிதறிக் கிடப்பதால் ஒருமுகப்பட்டவன்
இல்லாதவன் ஆகிறான்.  எனவே தன்னைத்தான் அறிய முடியாதவனாய் இருக்கிறான். எனவே "ஞமலியின் கேடாம் நான்'' என்றார்.

ஆனாலும் உன்னை அடைய வேண்டும் என்ற என் மன உறுதியால், வைராக்யத்தால் பெருமுயற்சி செய்தாகிலும் உன் அருள் கிடைக்கப் பெறுவேன்.
 ஶ்ரீ ரமணர் ஆன்மானுபவம் பெற்றவர். ஆயினும் தன் அன்பர்களுக்கு உறுதியுடன்  வைராக்யத்துடன் நடக்க வேண்டிய ஆன்ம விசாரப் பாதையைக் காட்டுகிறார்.
என்னுடைய முயற்சி, உன்னுடைய அருள் இரண்டும் சேர்ந்தால் உன்னை 'உறுவேன்'. 'அவனருளாலே அவன்தாள் வணங்கி'( சிவபுராணம்)அவன் தாளை அவன் அருள் இருந்தால்தான் வணங்க முடியும்.



  

22 June 2014

38. அருணாசல அட்சர மணமாலை

செளரியம் காட்டினை சழக்கற்றது என்றே
 சலியாது இருந்தாய் அருணாசலா

செளரியம் - வீரம்; சழக்கு - குற்றம், தளர்ச்சி; சலியாது - அசையாது.

சூரிய ஒளிக் கிரணங்கள் இருளகற்றுவது போல அறியாமையாகிய இருளை நீக்குபவன் செம்மலையாகிய அருணாசலன். தன்னைக் காண்பவர்க்கு காண்பவரின் மன நிலைக்கேற்றவாறு
அருள் செய்பவன்.
அருணாசலன் தன் வீரத்தைக் காட்டினன்! எப்படி? என் அறியாமை இருளகற்றி, அகந்தையை நீக்கினான். அதனால் என் சழக்கற்றது. தளர்ச்சி நீங்கி நான் உயிர்த்தெழுந்தேன். ஆன்ம ஞானம் பெற்றேன். அதுதான் வேலை முடிந்தது என்று  மீண்டும் அசைதல் இன்றி நீ அமைதியாய் இருக்கிறாய்.
நீ வீரம் காட்டி எனக்கு அருள் செய்யாவிட்டால், எனக்குத் துணையாகாவிட்டால் நான் என்ன செய்வேன்? எனவே அருள் புரிவாயாக.




21 June 2014

37. அருணாசல அட்சர மணமாலை

சோம்பியாய்ச் சும்மா சுகமுண்டு உறங்கிடின்
    சொல் வேறு என் கதி அருணாசலா

சுகக்கடல் பொங்க சொல்லும் உணர்வும் அடங்க சும்மாஇருக்க வைத்தாய்; சொல்லற சும்மா ஒன்றும் செய்யாமல்  சச்சிதானந்தத்தை அனுபவிக்கிறேன்.  இதைவிட வேறு என்ன  நற்கதி எனக்குக் கிடைக்கப் போகிறது?  சொல்வாய் அருணாசலா!

ஆண்டவனின் அருட்பார்வையால் உயர் நிலை அடைந்தவர்களை சாதாரணமனிதர்கள் புரிந்து கொள்வதில்லை! அதையே இங்கு பகவான் வேடிக்கையாகக் குறிப்பிடுகிறார்.

வேளா வேளைக்குச் சாப்பிடுபவனுக்கு நல்ல  தூக்கம் வரும். உண்ட மயக்கத்தில் உறங்குவான்! அவனை சோம்பேறி என்கிறோம்.

ஞானிகளோ ஆன்ம ஞானமாகிய சுகத்தை உண்கிறார்கள். ஞானத்திற்கு எல்லை மெளனம். பேசா அனுபூதி கிடைத்தவர்க்கே  சுகம் கிடைக்கும். அதற்கு எடுத்துக் காட்டாக வாழ்ந்தவர் ஶ்ரீரமணர்.
அருணாசலத் தந்தை ரமண மகனுக்கு மெளன உபதேசம் செய்தார். அருணகிரியாருக்கு ஆறுமுகன், குருவாய் உபதேசம் செய்தார்.

சொன்ன கிரெளஞ்ச கிரியூ  டுருவத் தொளைத்தவைவேல்
மன்ன கடம்பின் மலர்மாலை மார்பமெள னத்தையுற்று
நின்னை யுணர்ந்துணர்ந் தெல்லாமொருங்கிய நிர்க்குணம்பூண்
டென்னை மறந்திருந் தேனிறந் தேவிட்ட திவ்வுடம்பே.
                                                                     - கந்தரலங்காரம், பாடல் 19.
கிரவுஞ்ச மலையை வேலால் துளைத்தவனே! கடம்ப மலர் மாலை அணிந்தவனே! மெளனத்தை உற்று
உன்னை உணர்ந்து, ஐம்புலன்களும் அடங்கிய மேல் நிலையை அடைந்து,என்னையே மறந்துவிட்டேன்! இவ்வுடலின் நினைவும் அற்றேன்.

எத்தனை அருமையான பாடல். ஆண்டவனின் அருள் இருந்தால்தான் இந்த நிலை சித்திக்கும்.




20 June 2014

36. அருணாசல அட்சரமணமாலை

சொல்லாது சொலி நீ சொல்லற நில்லென்று
 சும்மா இருந்தாய் அருணாசலா

சொல்லற நில் - சொற்களற்ற அமைதி நிலை!
மனம் ஒருமுகப்படும் போது அமைதி உண்டாகிறது.அந்த அமைதியில் எண்ணங்கள் நின்று விடும். எண்ணங்கள் இல்லா நிலை அடைவது என்பது சாதாரணமான மனிதனுக்கு மிகக் கடினமானது.

ஶ்ரீ ரமணர் அருணாசலம் வந்தவுடன் சொல்லற நின்றார். பல ஆண்டு மவுனத்திற்குப் பிறகே பேச ஆரம்பித்தார்! அதையே ''சொல்லற நில்லென்று சொல்லாது சொலி நீ சும்மா இருந்தாய்'' என்கிறார்.

இறைவனாம் அருணாசலன் ஶ்ரீ ரமணருக்குச் செய்தது மவுன உபதேசம். அதையே ஶ்ரீ ரமணரும் கடைப் பிடித்தார்.
முதன் முதலில் பால் பிரண்டன் அவரை சந்திக்க வந்த போது பல கேள்விகளைக் கேட்க, அவற்றைக் குறித்துக் கொண்ட நோட்டுப் புத்தகத்துடன் வந்தார். ஆனால் ஶ்ரீரமண சந்நிதியில் சிறிது நேர மவுனத்திற்குப் பிறகு அவருடைய மனதில் இருந்த எல்லாக் கேள்விகளும் மறைந்தன!

" சொல்லற நில்லென்று சொல்லாது சொல்லி நீ சும்மா இருந்தாய் அருணாசலா.''
மனதை எண்ணங்களற்ற நிலைக்குக் கொண்டு செல்லுதல்தான் ஆன்ம விசாரத்தின் முதற்படி!

அருணாசல சிவ அருணாசலசிவ அருணாசல சிவ அருணாசலா.




19 June 2014

35. அருணாசல அட்சர மணமாலை

சையெனத் தள்ளிற் செய்வினை
    சுடுமலால் உய்வகை ஏதுரை அருணாசலா

கிரிவலம் வருகையில் திடீரென உனர்ச்சி வயப்பட்டுப் பாடிய பாடல் தொகுப்பு அட்சரமணமாலை. ஒரு குழந்தை தாயிடம் கெஞ்சுவது, நட்புரிமை காட்டுதல், கேலி செய்தல், பயத்தை வெளிப்படுத்துதல், எனப்  பல்வேறுவகை உணர்ச்சி வெளிப்பாடுகளை நாம் அட்சர மணமாலையில் காண்கிறோம்!

சூது செய்து சோதியாதே, செப்படி வித்தை காட்டாதே, சோதி உருக்காட்டு, உருப்படு வித்தை காட்டு, என்றெல்லாம் சொன்னவர், கல்லினுள் தேரைக்கும் அருள் செய்பவனாம் இறைவனிடம்,''நீயே என்னை
சையென்று கைவிட்டுவிட்டால் என்வினைகள் எனக்கு தீங்கு விளைக்குமேயன்றி என்னை யார் காப்பாற்றுவார்கள்? எனவே என்னைக் கைவிடேல், எனக்கு அருள் புரிவாய்.'' என வேண்டுவார்.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது பழமொழி. செய்வினை, செய்த வினை, செய்யப்போகும் வினை எல்லாமே துன்பம் விளைவிக்கும்.

''தீது நினைக்கும் பாவிகட்கும் கருணை செய்தவன் நீ! என்னளவில் சூது நினைப்பாய் எனில் யாரைத் துணை கொள்வேன்?''
''குற்றம் புரிதல் எனக்கியல்பே, குணமாக் கொள்ளல் உனக்கியல்பே'' என்று கருணை மயமானவன்
இறைவன் என்பார் வள்ளல் பெருமான்.





18 June 2014

34. அருணாசல அட்சரமணமாலை

சேராய் எனின் மெய் நீராய் உருகிக் கண்
  ணீரால் அழிவேன்  அருணாசலா

சேராய் - ஒன்றாகாவிட்டால் ; மெய் - ஆன்மா.

அருணாசலனே, நீ என்னோடு , என் ஆன்மாவோடு இரண்டறக் கலக்காவிட்டால், உன்மீது கொண்ட பக்தி மேலீட்டால் என் உடல் உருகிவிடும். நினைந்து, உருகி, நெகிழ்ந்து அதன் காரணமாக கண்ணீர் ஆறெனப் பெருகும். அழுது அழுது நான் அழிந்துவிடுவேன்.

அருணாசலனே, நீ என்னோடு சேர்ந்து விட்டால்,  என்மெய் உருகி, அந்த ஆனந்த பரவசத்தில் கண்களில் பெருகும் கண்ணீரால் 'நானென்ற' உணர்வு அழியும். ஞானம் விளையும்!

எனது உள்ளம் அன்பில் உருகிப் பக்குவப் பட்டுள்ளது. நீயோ என் மனதை நீராய் உருகச் செய்து உயிராய் நிலைத்திருக்கிறாய் என்கிறது சிவபுராணம்.''நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே"-
திருவாசகம்.

'' ஊற்றெழுங் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து, நனைந்து'' என்கிறார் வள்ளலார்.  - திருவருட்பா

''காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி'' தேவாரம்.
அன்பர்கள் முருகப் பெருமானை எப்படிப் பாடித் தொழுவார்கள் என்று அருணகிரியார் கூறுவதையும் கேட்போம்.
''அறுமுக குக குமர சரணமென அருள்பாடி யாடிமிக
  மொழி குழற அழுது தொழுது உருகும் அவர் விழியருவி முழுகுவதும்........" திருப்புகழ்
இறைவனை அடைய முடியும் என்கிறது பக்தி இலக்கியம். முயல்வோமாக.