20 July 2014

66. அருணாசல அட்சரமணமாலை

பித்துவிட்டுனை  நேர் பித்தனாக்கினை அருள்
     பித்தந் தெளி மருந்து  அருணாசலா

பித்து - மிகுந்த ஈடுபாடு, அறியாமை, பைத்தியம்.
பித்தம் -கல்லீரலில் சுரக்கும் நீர், மயக்கம்
பித்தன் - சிவபெருமான்

பித்தம் என்பது கல்லீரல் நோய். விரைவில் நீங்காதது. அது போல பொருட் பித்தும், காமினி, காஞ்சனப் பித்தும் விரைவில் நீங்காதது ஆகும். பிடித்தால் விடாதது.

மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் பொருட்கள் மீது பற்று உண்டு. அது அளவுக்கு மீறிப் போகும்போது அதனை, 'பித்துப்பிடித்து அலைகிறான்/ள்' என்கிறோம்.

இந்த உலகப் பொருட்கள் மீது  அதிகமான ஆசைவைத்து அலைகின்ற எளியவனான என்னுடைய
பித்தத்தை நீக்கினாய். ஆனால் பித்தத்தை நீக்கிய உன் மீது நான் பித்தனானேன்!'பித்தா பிறை சூடி'என உன்னையே எண்ணினேன். நீயோ பொருட்பித்தையும், உன்மீது ஏற்பட்ட பக்திப் பித்தையும் நீக்கும் மருந்தாகி என் சித்தந்தெளிவித்தாய் அருணாசலா!

'பித்தப் பெருமான் சிவபெருமான்,பெரிய பெருமான் தனக்கருமைப் பிள்ளைப் பெருமான்,' என முருகப் பெருமானைப் போற்றும் வள்ளல், ''நல்ல மருந்து இம்மருந்து-சுகம் நல்கும் வைத்தியநாத மருந்து
அருள்வடிவான மருந்து,''என்று சிவனே மருந்து என்று பாடுகிறார்.

'


No comments:

Post a Comment