30 September 2012

8. திருவருட்பா

               திருச்சிற்றம்பலம்

ஒளி வளர் உயிரே உயிர் வளர் ஒளியே

ஒளி உயிர் வளர் தரும் உணர்வே

வெளி வளர் நிறைவே நிறை வளர் வெளியே

வெளி நிறை வளர் தரு விளைவே

வளி வளர் அசைவே அசை  வளர் வளியே

வளியசை வளர் தரு செயலே

அளிவளர் அனலே அனல் வளர் அளியே

அளியனல் வளர்சிவ பதியே. -வள்ளலார்


29 September 2012

7. திருவருட்பா

                        திருச்சிற்றம்பலம்

என் இதயக்கமலத்தே இருந்தருளுந் தெய்வம்

என்னிரண்டு கண்மணிக்குள் இலங்குகின்ற தெய்வம்

பொன்னடியென் சென்னியிலே பொருந்தவைத்த தெய்வம்

பொய்யாத தெய்வமிடர் செய்யாத தெய்வம்

அன்னியமல் லாததெய்வம் அறிவான தெய்வம்

அவ்வறிவுக் கறிவாமென் அன்பான தெய்வம்

சென்னிலையிற் செம்பொருளாய்த் திகழ்கின்ற தெய்வம்

சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

28 September 2012

6. திருவருட்பா

                                                                                    
                                                                                     திருச் சிற்றம்பலம்
                                                                    

    தாயாகித்  தந்தையுமாய்த்  தாங்குகின்ற தெய்வம்

    தன்னை நிகரில்லாத  தனித் தலைமைத் தெய்வம்
 
    வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம்

    மலரடியென் சென்னிமிசை வைத்த பெருந் தெய்வம்

    காயாது கனியாகிக் கலந்தினிக்கும் தெய்வம்

    கருணை நிதித் தெய்வம் முற்றுங் காட்டுவிக்குந் தெய்வம்

    சேயாக எனை வளர்க்குந் தெய்வ மகாதெய்வம்

    சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
                                                                                                   
                                                                                                     




27 September 2012

5. திருப்பள்ளி எழுச்சி


                                  திருச்சிற்றம்பலம்

பொழுது விடிந்ததென் உள்ளமென் கமலம்
               பூத்தது பொன்னொளி பொங்கியதெங்கும்
தொழுது நிற்கின்றனன் செய்பணி எல்லாம்
               சொல்லுதல் வேண்டும் என் வல்ல சற்குருவே
முழுதும் ஆனான் என ஆகம வேத
               முறைகளெல்லாம் மொழிகின்ற முன்னவனே
எழுதுதல் அரிய சீர் அருட்பெருஞ் சோதி
                என் தந்தையே பள்ளி எழுந்தருள்வாயே!--திருஅருட்பா    

26 September 2012

4. தனித் திரு மாலை



தொடுக்கவோ நல்ல சொன்மலர் இல்லை நான்

துதிக்கவோ பத்தி சுத்தமும் இல்லை உள்

ஒடுக்கவோ மனம் என் வசம் இல்லை 

ஊடுற்ற ஆணவ மாதி மலங்களைத்

தடுக்கவோ திடம் இல்லை என் மட்டிலே
                                                                     
                                                                                    தயவு தான் நினக்கில்லை  உயிரையும்
                                                                                   
                                                                                    விடுக்கவோ மனம் இல்லை என் செய்குவேன்

                                                                                    விளங்கு மன்றில் விளங்கிய வள்ளலே.

                                                                                                                                         --திருவருட்பா

25 September 2012

3. Splendour


                                        Tat savitur varam rupam jyotih parasya dhimahi,
                                        yannah satyena dipayet.

      Let us meditate on the most auspicious form of Savitri 
on  the LIGHT of the Supreme which shall illumine us with the Truth.
-SriAurobindo's Gayatri

2. கண் மூன்றும் தழைத்த தேவன்

  என்னுயிர் நீ என்னுயிர்க்கோர் உயிரும் நீஎன்
                 
இன்னுயிர்க்குத்  துணைவன் நீ என்னை ஈன்ற
                
அன்னைநீ என்னுடைய அப்ப நீ என்
                
அரும்பொருள்நீ என்னிதயத் தன்பு நீஎன்
                 
 நன்னெறிநீ எனக்குரிய உறவுநீ என்
                 
 நற்குருநீ எனைக் கலந்த நட்புநீ என்
                  
 தன்னுடைய வாழ்வுநீ என்னைக் காக்குந்
                 
 தலைவன்நீ கண்மூன்று தழைத்த தேவே.
             
திருச்சிற்றம்பலம்

  -மகாதேவ மாலை, பாடல்[68]
                                                                                
 திருவருட்பா.

24 September 2012

1. அருட் பெருஞ்சோதி.

அருட் பெருஞ்சோதி அருட் பெருஞ்சோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்சோதி!
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க, வள்ளல் மலரடி வாழ்க வாழ்க.-வள்ளலார்.


மனித மனத்தினால் கற்பனை கூட செய்து பார்க்கமுடியாதது.
இவ்வளவு பெரியது என அளவிடமுடியாதது.
ஒளிப்பிழம்பு, பெரிய சோதி, தான் எந்த மாற்றமும் அடையாதது.
எல்லாத் திசைகளிலும் உள்ள அனைத்தும்  செயல்படக்  காரணமாக இருக்கிறது.
தனிப் பெருமை வாய்ந்தது.
மிகப் பெரிய கருணையுடையது.
இவ்வுலக உயிர்கள் அனைத்தையும் இன்பமுடன் வாழச் செய்கிறது.
சோதியே, உன்னை உள்ளத்தில் தியானித்து வணங்குகிறோம்.

                         திருச்சிற்றம்பலம்