27 September 2012

5. திருப்பள்ளி எழுச்சி


                                  திருச்சிற்றம்பலம்

பொழுது விடிந்ததென் உள்ளமென் கமலம்
               பூத்தது பொன்னொளி பொங்கியதெங்கும்
தொழுது நிற்கின்றனன் செய்பணி எல்லாம்
               சொல்லுதல் வேண்டும் என் வல்ல சற்குருவே
முழுதும் ஆனான் என ஆகம வேத
               முறைகளெல்லாம் மொழிகின்ற முன்னவனே
எழுதுதல் அரிய சீர் அருட்பெருஞ் சோதி
                என் தந்தையே பள்ளி எழுந்தருள்வாயே!--திருஅருட்பா    

No comments:

Post a Comment