29 September 2012

7. திருவருட்பா

                        திருச்சிற்றம்பலம்

என் இதயக்கமலத்தே இருந்தருளுந் தெய்வம்

என்னிரண்டு கண்மணிக்குள் இலங்குகின்ற தெய்வம்

பொன்னடியென் சென்னியிலே பொருந்தவைத்த தெய்வம்

பொய்யாத தெய்வமிடர் செய்யாத தெய்வம்

அன்னியமல் லாததெய்வம் அறிவான தெய்வம்

அவ்வறிவுக் கறிவாமென் அன்பான தெய்வம்

சென்னிலையிற் செம்பொருளாய்த் திகழ்கின்ற தெய்வம்

சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

No comments:

Post a Comment