24 September 2012

1. அருட் பெருஞ்சோதி.

அருட் பெருஞ்சோதி அருட் பெருஞ்சோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்சோதி!
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க, வள்ளல் மலரடி வாழ்க வாழ்க.-வள்ளலார்.


மனித மனத்தினால் கற்பனை கூட செய்து பார்க்கமுடியாதது.
இவ்வளவு பெரியது என அளவிடமுடியாதது.
ஒளிப்பிழம்பு, பெரிய சோதி, தான் எந்த மாற்றமும் அடையாதது.
எல்லாத் திசைகளிலும் உள்ள அனைத்தும்  செயல்படக்  காரணமாக இருக்கிறது.
தனிப் பெருமை வாய்ந்தது.
மிகப் பெரிய கருணையுடையது.
இவ்வுலக உயிர்கள் அனைத்தையும் இன்பமுடன் வாழச் செய்கிறது.
சோதியே, உன்னை உள்ளத்தில் தியானித்து வணங்குகிறோம்.

                         திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment