29 November 2012

43. திருவாசகம்

                                     
                          ஆம் ஆறு  உன் திருவடிக்கே அகம் குழையேன்

                          அன்பு உருகேன் பூமாலை புனைந்து ஏத்தேன்

                          புகழ்ந்து உரையேன் புத்தேளிர் கோமான் நின்
                         
                          திருக்கோயில் தூகேன் மெழுகேன் கூத்து ஆடேன்

                          சாம் ஆறே விரைகின்றேன் சதுராலே சார்வானே.

             யோகசாதனத்தால் அடையப்பெறும் மகாதேவனே! அடியேன்  உன் திருவடியை நினைந்து
             மனம் குழையவில்லை, அன்பு கொண்டு உருகவில்லை, பூமாலையால் அலங்கரித்து, புகழ்ந்து
             பாடவில்லை,உன் திருக்கோவிலை துப்புரவாக்கி, மெழுகி தூய்மை செய்யவில்லை. உன் திரு
             நாமத்தை உச்சரித்து மெய்மறந்து   ஆடவில்லை. வீணில் மரணத்தை நோக்கிப் போய்க்
             கொண்டிருக்கிறேன். நான் உய்யும் வண்ணம் எனக்கு அருள் புரிவாய்.

                                              திருச்சிற்றம்பலம்   

28 November 2012

42. திருவாசகம்

                         
                           நாடகத்தால்  உன்அடியார்  போல் நடித்து  நான் நடுவே

                           வீடு அகத்தே  புகுந்திடுவான்  மிகப் பெரிதும்  விரைகின்றேன்

                           ஆடு அகம் சீர்  மணிக்குன்றே  இடைஅறா அன்பு உனக்கு என்

                           ஊடு அகத்தே நின்று உருகத்  தந்தருள் எம் உடையானே.

                                                 திருச்சிற்றம்பலம்

                             உன்னிடம் பக்தி செய்வது போல் பாசாங்கு செய்து, 

                             முக்தி பெற விரும்பும் என் இதயத்திலே 

                             இடைவிடாத அன்பு செய்து உருகும்படி பக்குவப்படுத்துவாயாக.

                                              - மாணிக்கவாசகர் -

27 November 2012

41. திருவெம்பாவையில் அண்ணாமலை


அண்ணாமலையான் அடிக்கமலம் சென்று இறைஞ்சும்

விண்ணோர் முடியின் மணித்தொகை வீறுஅற்றால் போல்

கண் ஆர் இரவி கதிர்வந்து கார் கரப்பத்

தண் ஆர் ஒளிமழுங்கித் தாரகைகள் தாம் அகலப்

பெண் ஆகி ஆண் ஆய் அலிஆய்ப் பிறங்கு ஒளிசேர்

விண் ஆகி மண் ஆகி இத்தனையும் வேறாகிக்

கண் ஆர் அமுதமும் ஆய் நின்றான் கழல்பாடிப்

பெண்ணே இப்பூம் புனல்பாய்ந்து ஆடேல் ஓர் எம்பாவாய்.

                                                                        - பாடல் 18          

                 திருச்சிற்றம்பலம்

26 November 2012

40.அருணாசல மாகாத்மியம்

                 நந்தி வாக்கு

அதுவே தலம் அருணாசலம் தலம் யாவிலும் அதிகம்

அது பூமியின் இதயம் அறி; அதுவே சிவன் இதயப்

பதியாம் ஒரு மருமத்தலம் பதியாம் அவன் அதிலே

வதிவான் ஒளி மலையா நிதம் அருணாசலம் எனவே.

அருணாசல சிவ  அருணாசல சிவ 

அருணாசல சிவ  அருணாசல சிவ

திருவண்ணாமலை

25 November 2012

39. திருவாசகம்


உடைய நாதனே போற்றி நின் அலால்

      பற்று மற்று  எனக்கு ஆவது ஒன்று இனி

உடையனோ பணி போற்றி உம்பரார்

       தம் பரா பரா போற்றி யாரினும்

கடையன் ஆயினேன் போற்றி என் பெரும்

       கருணையாளனே போற்றி என்னை நின்

அடியன் ஆக்கினாய் போற்றி ஆதியும்

        அந்தம் ஆயினாய் போற்றி அப்பனே.

                                     --- திருச்சதகம், ஆனந்தாதீதம்

                                     ---மாணிக்கவாசகர் 

24 November 2012

38. திருவாசகம்


யானே பொய் என் நெஞ்சும்
         
            பொய்  என் அன்பும் பொய்

ஆனால் வினையேன் அழுதால்

            உனைப் பெறலாமே

தேனே அமுதே கரும்பின்

            தெளிவே தித்திக்கும்

மானே அருளாய் அடியேன்

            உனைவந்து உறும் ஆறே.

                                --திருச்சதகம்-- ஆனந்த பரவசம்
     
                                --மாணிக்கவாசகர்



23 November 2012

37.அன்னையே


எண்ணிய முடிதல் வேண்டும்

நல்லவே எண்ணல் வேண்டும்;

திண்ணிய நெஞ்சம் வேண்டும்;

தெளிந்த நல்லறிவு வேண்டும்;

பண்ணிய பாவ மெல்லாம்

பரிதிமுன் பனியே போல,

நண்ணிய நின்முன் இங்கு

நசித்திடல் வேண்டும் அன்னாய்!  -பாரதியார்


22 November 2012

36.தாலேலோ


மன்னுபுகழ்க் கவுசலைதன் மணிவயிறு வாய்த்தவனே!

தென்னிலங்கைக் கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன்சேர்

கன்னி நன்மாமதிள் புடைசூழ் கணபுரத்தென் கருமணியே!

என்னுடைய இன்னமுதே இராகவனே! தாலேலோ  1




கொங்குமலி கருங்குழலாள்  கவுசலைதன் குலமதலாய்!

தங்குபெரும் புகழ்ச்சனகன் திருமருகா! தாசரதி!

கங்கையிலும் தீர்த்தமலி கணபுரத்தென் கருமணியே!

எங்கள் குலத்தின்னமுதே! இராகவனே! தாலேலோ  2

21 November 2012

35. -ஆழ்வார் திருமொழி


தருதுயரம் தடாயேல் உன் சரணலலால் சரணில்லை

விரைகுழுவு  மலர்ப்  பொழில்சூழ் விற்றுவக் கோட்டம்மானே!

அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன்

அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்றிருந்தேனே.1


வாளா லருத்துச் சுடினும் மருத்துவன்பால்

மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்

மீளாத்துயர் தரினும் விற்றுவக் கோட்டம்மா! நீ

ஆளாவுன தருளே பார்ப்பன் அடியேனே.

20 November 2012

34. திருவேங்கடமலையில்.....


ஊனேறு செல்வத்து உடற்பிறவி யான் வேண்டேன்

ஆனேறேழ் வென்றான் அடிமைத் திறமல்லால்

கூனேறு சங்கமிடத்தான் தன் வேங்கடத்து

கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே.  1


ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ

வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்

தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில்

மீனாய்ப் பிறக்கும் விதியுடையெனாவேனே. 2



19 November 2012

33. பெருமாள் திருமொழி


மெய்யில் வாழ்க்கையை மெய்யெனக் கொள்ளும்

வையந்தன்னொடும் கூடுவதில்லையான்

ஐயனே! அரங்கா! என்றழைக்கின்றேன்

மையல் கொண்டொழிந்தேன் என் தன்மாலுக்கே.1

தீதில் நன்னெறி நிற்க அல்லாது செய்

நீதியாரொடும் கூடுவ தில்லையான்

ஆதி ஆயன் அரங்கன் அந்தாமரைப்

பேதை மாமணவாளன் தன்பித்தனே. 2

எத்திறத்திலும் யாரொடும் கூடும் அச்

சித்தந்தன்னைத் தவிர்த்தனன் செங்கண்மால்

அத்தனே! அரங்கா! என்றழைகின்றேன்

பித்தனாயொழிந்தேன் எம்பிரானுக்கே. 3




18 November 2012

32. திருமாலை -தொண்டரடிப் பொடியாழ்வார்

பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்

அச்சுதா! அமரர் ஏறே! ஆயர்தம் கொழுந்தே! என்னும்

இச்சுவை தவிர யான் போய் இந்திரலோக மாளும்

அச்சுவை பெரினும் வேண்டேன் அரங்காமா நகருளானே!


வண்டினம் முரலும் சோலை மயிலினம் மாலும் சோலை

கொண்டல் மீதணவும் சோலை குயிலினம் கூவும் சோலை

அண்டர் கோனமரும் சோலை அணிதிரு வரங்கமென்னா

மிண்டர் பாய்ந்துண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கிடுமினீரே.


கங்கையிற் புனிதமாய காவிரிநடுவு பாட்டு

பொங்கு நீர்பரந்து பாயும் பூம்பொழில் அரங்கந்தன்னுள்

எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்

எங்ஙனம் மறந்து வாழ்கேன்? ஏழையேன் ஏழையேனே.




17 November 2012

31. மாணிக்கக்கிண்கிணி

                                                     கைகொட்டி விளையாடுதல்

                           மாணிக்கக் கிண்கிணி யார்ப்ப மருங்கின் மேல்
                         
                           ஆணிப்பொன்னாற் செய்த ஆய்பொன்னுடை மணி

                           பேணிப் பவளவாய் முத்திலங்க பண்டு

                           காணி கொண்ட கைகளால் சப்பாணி கருங்குழற் குட்டனே! சப்பாணி.

                          பொன்னரை நாணொடு மாணிக்கக் கிண்கிணி

                          தன்னரையாடத் தனிச்சுட்டி தாழ்ந்தாட

                          என்னரை மேல் நின்றிழிந்து உங்களாயர்தம்

                          மன்னரை மேல் கொட்டாய் சப்பாணி மாயவனே! கொட்டாய் சப்பாணி


                                                                                                    ---- பெரியாழ்வார்      

16 November 2012

30. 9 ஆந் திருமொழி-வெண்ணெய் விழுங்கி

            வருக வருக வருக இங்கே
           
            வாமன நம்பி! வருக இங்கே

            கரியகுழற் செய்ய வாய் முகத்துக்

            காகுத்த நம்பி! வருகவிங்கே

            அரியனிவ னெனக்கின்று நங்காய்!

            அஞ்சனவண்ணா! அசலகத்தார்

            பரிபவம் பேசத் தரிக்ககில்லேன்
         
            பாவியேனுக்கு இங்கே போதராயே.

                                   - பெரியாழ்வார்

           

             

15 November 2012

29. திருப்பல்லாண்டு

பல்லாண்டு பல்லாண்டு  பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்

மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் செவ்வடி செவ்வி திருக்காப்பு.

அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு

வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு

வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு

படைபோர் புக்கு முழங்கும் அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே.

                                   -----------------------

முத்தும் மணியும் வயிரமும் நன் பொன்னும்

தத்திப் பதித்துத் தலைப் பெய்தாற்போல் எங்கும்

பத்து விரலும் மணிவண்ணன் பாதங்கள்

ஒத்திட்டு இருந்தவா காணீரே ஒண்ணுதலீர்! வந்து காணீரே.

                                             -பெரியாழ்வார் திருமொழி
         

14 November 2012

28.ஓம் வணக்கம்

எங்கும் நிறைவான பரம்பொருளே! மங்களக் காலையில் மலர்முகங் காட்டுகின்றாய்;

இள மணத் தென்றலில் இன்பக் குழலூதுகின்றாய்; 'அன்பு, அன்பு' என்று சோலைக்

குயிலில் அகவுகின்றாய்; அதோ பாயும் மலை அருவியில், '  ஓம் தத்-ஸத்-ஓம் என்று

வேதமுரசொலிக்கின்றாய்; திங்களில் அமுத நகை புரிந்து, எல்லையற்ற கடலைப்

பொங்கியெழுந்து  ஆனந்தக் கூத்தாடச் செய்கிறாய். வானரசை இலக்குகிறாய்;

மனைதொறும்  சவுந்தர்ய   சக்தியாக   விளங்கிக்      குலதர்மத்தை  வளர்க்கிறாய்.

வாழ்க்கை   எனும்  ஆசானைக்  கொண்டு   பாடங்  கற்பித்து,  எமது    மனத்தைப்

பக்குவப் படுத்தி,  முடிவில்   உனது  திருவடியே தஞ்சமென்று உணர வைக்கிறாய்.

நீ வாழ்க.                                                               - கவியோகி சுத்தானந்த பாரதி




                              திருச்சிற்றம்பலம்

13 November 2012

27.அன்பு

அன்பெனும்  பிடியுள்  அகப்படும் மலையே
       
           அன்பெனும் குடில் புகும் அரசே

அன்பெனும்  வலைக்குள் படுபரம் பொருளே

           அன்பெனும் கரத்தமர் அமுதே

அன்பெனும்  கடத்துள் அடங்கிடும் கடலே

           அன்பெனும் உயிரொளிர் அறிவே

அன்பெனும் அணுவுள் அமைந்த பேரொளியே

           அன்புருவாம் பரசிவமே!

                 திருச்சிற்றம்பலம்.

அன்பே வடிவான ஆண்டவன் அனைவருக்கும் 

இந்த தீபாவளித் திருநாளில் ஆனந்தத்தையும்

அனைத்து  இன்பங்களையும் அருள்வானாக.

12 November 2012

26.தேவதேவன்

ஆறுமுகப் பெருங் கருணைக் கடலே தெய்வ

யானைமகிழ்  மணிக்குன்றே அரசே முக்கட்

பேறுமுகப் பெருஞ்சுடர்க்குட் சுடரே செவ்வேல்

பிடித்தருளும் பெருந்தகையே பிரம ஞானம்

வீறுமுகப் பெருங்குணத்தோர் இதயத் தோங்கும்

விளக்கமே  ஆனந்த   வெள்ளமே    முன்

தேறுமுகப்  பெரியஅருட்    குருவாய்  என்னைச்

சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.------வள்ளலார்

                     திருச்சிற்றம்பலம்


11 November 2012

25.பதி விளக்கம்

                               
                       உரைவளர் கலையே கலைவள ருரையே

                       உரைகலை   வளர்தரு   பொருளே

                       விரைவளர்  மலரே மலர்வளர் விரையே

                       விரைமலர்   வளர்தரு    நறவே

                       கரைவளர்  தருவே  தருவளர்  கரையே

                       கரைதரு    வளர்கிளர்     கனியே

                       பரைவள  ரொளியே  யொளிவளர்  பரையே

                       பரையொளி   வளர்சிவ   பதியே.

                                  திருச்சிற்றம்பலம்.

10 November 2012

24.ஓம் நமச்சிவாயம்

                        ஓம் நமச்சிவாயமே  உணர்ந்து  மெய்  உணர்ந்த  பின்

                        ஓம் நமச்சிவாயமே  உணர்ந்து  மெய்  தெளிந்த  பின்

                        ஓம் நமச்சிவாயமே  உணர்ந்து   மெய்  உணர்ந்த  பின்

                        ஓம்  நமச்சிவாயமே  உட் கலந்து நிற்குமே.


                                     திருச்சிற்றம்பலம்.

9 November 2012

23.கந்தர் அலங்காரம்

                                 

                      விழிக்குத்  துணைதிரு  மென்மலர்ப்  பாதங்கள்; மெய்ம்மை குன்றா

                      மொழிக்குத்  துணைமுரு  காஎனும்  நாமங்கள்; முன்பு செய்த

                      பழிக்குத்  துணை அவன் பன்னிரு தோளும்;  பயந்த தனி

                      வழிக்குத்  துணைவடி  வேலும்  செங்கோடன்  மயூரமுமே.

                                          திருச்சிற்றம்பலம்.

                     

8 November 2012

22.அன்பு மாலை

அருள் நிறைந்த பெருந்தகையே ஆனந்த அமுதே

அற்புதப் பொன் அம்பலத்தே ஆடுகின்ற அரசே

தெருள் நிறைந்த சிந்தையிலே தித்திக்கும் தேனே

செங்கனியே மதிஅணிந்த செஞ்சடை எம்பெருமான்

மருள் நிறைந்த மனக்கொடியேன் வஞ்சமெலாங் கண்டு

மகிழ்ந்தினிய வாழ்வளித்த மாகருணைக் கடலே

இருள் நிறைந்த மயக்கம் இன்னுந் தீர்த்தருளல் வேண்டும்

என்னுடைய நாயகனே இது தருணங் காணே.

                              -அருட் பிரகாச வள்ளலார்


                திருச்சிற்றம்பலம். 

7 November 2012

21.சித்தர் பாடல்கள்

வாயிலே குதித்த நீரை எச்சிலென்று சொல்கிறீர்

வாயிலே குதப்பு வேதம் வரம் எனக்கடவதோ?

வாயில் எச்சில் போகவென்று நீர்தனைக் குடிப்பீர்காள்

வாயில் எச்சில் போனவண்ணம் வந்திருந்து சொல்லுமே.


ஓதுகின்ற வேதம் எச்சில்; உள்ள மந்திரங்கள் எச்சில்,

போகங்களான எச்சில்: பூதலம் ஏழும் எச்சில்:

மாதிருந்த விந்து எச்சில்; மதியும் எச்சில், ஒளி எச்சில்

ஏதில் எச்சல் இல்லதிலை இல்லை இல்லை இல்லையே?

6 November 2012

20.சித்தர் பாடல்கள் -சிவவாக்கியர்

செய்ய தெங்கிலே இளநீர் சேர்ந்த காரணங்கள் போல்

ஐயன் வந்திங்கென்னுளம் புகுந்து கோயில் கொண்டனன்,

ஐயன் வந்திங்கென்னுளம் புகுந்து கோயில் கொண்டபின்

வையகத்தில் மாந்தர் முன்னம் வாய்திறப்பது இல்லையே.



கோயிலாவது ஏதடா? குளங்க ளாவது ஏதடா?

கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே,

கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே

ஆவதும் அழிவதுவும் இல்லை இல்லை இல்லையே.

                 திருச்சிற்றம்பலம் 

5 November 2012

19.சித்தர் பாடல்கள் -சிவவாக்கியர்

அஞ்செழுத்திலே பிறந்து அவ்வஞ்செழுத்திலே வளர்ந்து

அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்!

அஞ்செழுத்தில் ஓரெழுத்து அறிந்துகூட வல்லீரேல்

அஞ்சலஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே.


ஓடமுள்ள போதெல்லாம் நீர் ஓடியே உலாவலாம்;

ஓடமுள்ள போதெல்லாம் உறுதி பண்ணிக் கொள்ளலாம்;

ஓடமும் உடைந்த போதங்கு ஒப்பில்லாத வெளியிலே

ஆடுமில்லை கோலுமில்லை ஆருமில்லை ஆனதே.

                         



                   திருச்சிற்றம்பலம்







4 November 2012

18.சித்தர் பாடல்கள்- சிவவாக்கியர்

அஞ்சு மூணும் எட்டதாய் அநாதியான மந்திரம்

நெஞ்சிலே நினைந்து கொண்டு நீர் உருச் செபிப்பீரேல்

பஞ்சமான பாதகம் பண்ணூறு கோடி செய்யினும்

பஞ்சு போல் பறக்கும் என்று நான் மறைகள் பன்னுமே.



அண்டவாசல் ஆயிரம் பிரசண்ட வாசல் ஆயிரம்

ஆறிரண்டு நூறுகோடி யான வாசல் ஆயிரம்

இந்த வாசல் ஏழைவாசல் ஏகபோக மானதாம்

எம்பிரான் இருக்கும் வாசல் யாவர்காண வல்லரே?


                 திருச்சிற்றம்பலம்

3 November 2012

17.சித்தர் பாடல்கள்--சிவவாக்கியர்

ஆன அஞ்செழுத்துளே அண்டமும் அகண்டமும்

ஆன அஞ்செழுத்துளே ஆதியான மூவரும்

ஆன அஞ்செழுத்துளே அகாரமும் மகாரமும்

ஆன அஞ்செழுத்துளே அடங்கலாவல் உற்றவே.



மண்ணும் நீ அவ்விண்ணும்நீ மறிகடல்கள் ஏழும் நீ;

எண்ணும் நீ எழுத்துநீ இசைந்த பண்ணெழுத்தும் நீ

கண்ணும் நீ மணியும்நீ கண்ணில் ஆடும் பாவை நீ

நண்ணும் நீர்மை நின்றபாதம் நண்ணுமாறு அருளிடாய்.


                திருச்சிற்றம்பலம்