14 November 2012

28.ஓம் வணக்கம்

எங்கும் நிறைவான பரம்பொருளே! மங்களக் காலையில் மலர்முகங் காட்டுகின்றாய்;

இள மணத் தென்றலில் இன்பக் குழலூதுகின்றாய்; 'அன்பு, அன்பு' என்று சோலைக்

குயிலில் அகவுகின்றாய்; அதோ பாயும் மலை அருவியில், '  ஓம் தத்-ஸத்-ஓம் என்று

வேதமுரசொலிக்கின்றாய்; திங்களில் அமுத நகை புரிந்து, எல்லையற்ற கடலைப்

பொங்கியெழுந்து  ஆனந்தக் கூத்தாடச் செய்கிறாய். வானரசை இலக்குகிறாய்;

மனைதொறும்  சவுந்தர்ய   சக்தியாக   விளங்கிக்      குலதர்மத்தை  வளர்க்கிறாய்.

வாழ்க்கை   எனும்  ஆசானைக்  கொண்டு   பாடங்  கற்பித்து,  எமது    மனத்தைப்

பக்குவப் படுத்தி,  முடிவில்   உனது  திருவடியே தஞ்சமென்று உணர வைக்கிறாய்.

நீ வாழ்க.                                                               - கவியோகி சுத்தானந்த பாரதி




                              திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment