18 November 2012

32. திருமாலை -தொண்டரடிப் பொடியாழ்வார்

பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்

அச்சுதா! அமரர் ஏறே! ஆயர்தம் கொழுந்தே! என்னும்

இச்சுவை தவிர யான் போய் இந்திரலோக மாளும்

அச்சுவை பெரினும் வேண்டேன் அரங்காமா நகருளானே!


வண்டினம் முரலும் சோலை மயிலினம் மாலும் சோலை

கொண்டல் மீதணவும் சோலை குயிலினம் கூவும் சோலை

அண்டர் கோனமரும் சோலை அணிதிரு வரங்கமென்னா

மிண்டர் பாய்ந்துண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கிடுமினீரே.


கங்கையிற் புனிதமாய காவிரிநடுவு பாட்டு

பொங்கு நீர்பரந்து பாயும் பூம்பொழில் அரங்கந்தன்னுள்

எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்

எங்ஙனம் மறந்து வாழ்கேன்? ஏழையேன் ஏழையேனே.




No comments:

Post a Comment