25 November 2012

39. திருவாசகம்


உடைய நாதனே போற்றி நின் அலால்

      பற்று மற்று  எனக்கு ஆவது ஒன்று இனி

உடையனோ பணி போற்றி உம்பரார்

       தம் பரா பரா போற்றி யாரினும்

கடையன் ஆயினேன் போற்றி என் பெரும்

       கருணையாளனே போற்றி என்னை நின்

அடியன் ஆக்கினாய் போற்றி ஆதியும்

        அந்தம் ஆயினாய் போற்றி அப்பனே.

                                     --- திருச்சதகம், ஆனந்தாதீதம்

                                     ---மாணிக்கவாசகர் 

No comments:

Post a Comment