4 November 2012

18.சித்தர் பாடல்கள்- சிவவாக்கியர்

அஞ்சு மூணும் எட்டதாய் அநாதியான மந்திரம்

நெஞ்சிலே நினைந்து கொண்டு நீர் உருச் செபிப்பீரேல்

பஞ்சமான பாதகம் பண்ணூறு கோடி செய்யினும்

பஞ்சு போல் பறக்கும் என்று நான் மறைகள் பன்னுமே.



அண்டவாசல் ஆயிரம் பிரசண்ட வாசல் ஆயிரம்

ஆறிரண்டு நூறுகோடி யான வாசல் ஆயிரம்

இந்த வாசல் ஏழைவாசல் ஏகபோக மானதாம்

எம்பிரான் இருக்கும் வாசல் யாவர்காண வல்லரே?


                 திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment