29 November 2012

43. திருவாசகம்

                                     
                          ஆம் ஆறு  உன் திருவடிக்கே அகம் குழையேன்

                          அன்பு உருகேன் பூமாலை புனைந்து ஏத்தேன்

                          புகழ்ந்து உரையேன் புத்தேளிர் கோமான் நின்
                         
                          திருக்கோயில் தூகேன் மெழுகேன் கூத்து ஆடேன்

                          சாம் ஆறே விரைகின்றேன் சதுராலே சார்வானே.

             யோகசாதனத்தால் அடையப்பெறும் மகாதேவனே! அடியேன்  உன் திருவடியை நினைந்து
             மனம் குழையவில்லை, அன்பு கொண்டு உருகவில்லை, பூமாலையால் அலங்கரித்து, புகழ்ந்து
             பாடவில்லை,உன் திருக்கோவிலை துப்புரவாக்கி, மெழுகி தூய்மை செய்யவில்லை. உன் திரு
             நாமத்தை உச்சரித்து மெய்மறந்து   ஆடவில்லை. வீணில் மரணத்தை நோக்கிப் போய்க்
             கொண்டிருக்கிறேன். நான் உய்யும் வண்ணம் எனக்கு அருள் புரிவாய்.

                                              திருச்சிற்றம்பலம்   

No comments:

Post a Comment