3 November 2012

17.சித்தர் பாடல்கள்--சிவவாக்கியர்

ஆன அஞ்செழுத்துளே அண்டமும் அகண்டமும்

ஆன அஞ்செழுத்துளே ஆதியான மூவரும்

ஆன அஞ்செழுத்துளே அகாரமும் மகாரமும்

ஆன அஞ்செழுத்துளே அடங்கலாவல் உற்றவே.



மண்ணும் நீ அவ்விண்ணும்நீ மறிகடல்கள் ஏழும் நீ;

எண்ணும் நீ எழுத்துநீ இசைந்த பண்ணெழுத்தும் நீ

கண்ணும் நீ மணியும்நீ கண்ணில் ஆடும் பாவை நீ

நண்ணும் நீர்மை நின்றபாதம் நண்ணுமாறு அருளிடாய்.


                திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment