27 November 2012

41. திருவெம்பாவையில் அண்ணாமலை


அண்ணாமலையான் அடிக்கமலம் சென்று இறைஞ்சும்

விண்ணோர் முடியின் மணித்தொகை வீறுஅற்றால் போல்

கண் ஆர் இரவி கதிர்வந்து கார் கரப்பத்

தண் ஆர் ஒளிமழுங்கித் தாரகைகள் தாம் அகலப்

பெண் ஆகி ஆண் ஆய் அலிஆய்ப் பிறங்கு ஒளிசேர்

விண் ஆகி மண் ஆகி இத்தனையும் வேறாகிக்

கண் ஆர் அமுதமும் ஆய் நின்றான் கழல்பாடிப்

பெண்ணே இப்பூம் புனல்பாய்ந்து ஆடேல் ஓர் எம்பாவாய்.

                                                                        - பாடல் 18          

                 திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment