7 November 2012

21.சித்தர் பாடல்கள்

வாயிலே குதித்த நீரை எச்சிலென்று சொல்கிறீர்

வாயிலே குதப்பு வேதம் வரம் எனக்கடவதோ?

வாயில் எச்சில் போகவென்று நீர்தனைக் குடிப்பீர்காள்

வாயில் எச்சில் போனவண்ணம் வந்திருந்து சொல்லுமே.


ஓதுகின்ற வேதம் எச்சில்; உள்ள மந்திரங்கள் எச்சில்,

போகங்களான எச்சில்: பூதலம் ஏழும் எச்சில்:

மாதிருந்த விந்து எச்சில்; மதியும் எச்சில், ஒளி எச்சில்

ஏதில் எச்சல் இல்லதிலை இல்லை இல்லை இல்லையே?

No comments:

Post a Comment