22 November 2012

36.தாலேலோ


மன்னுபுகழ்க் கவுசலைதன் மணிவயிறு வாய்த்தவனே!

தென்னிலங்கைக் கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன்சேர்

கன்னி நன்மாமதிள் புடைசூழ் கணபுரத்தென் கருமணியே!

என்னுடைய இன்னமுதே இராகவனே! தாலேலோ  1




கொங்குமலி கருங்குழலாள்  கவுசலைதன் குலமதலாய்!

தங்குபெரும் புகழ்ச்சனகன் திருமருகா! தாசரதி!

கங்கையிலும் தீர்த்தமலி கணபுரத்தென் கருமணியே!

எங்கள் குலத்தின்னமுதே! இராகவனே! தாலேலோ  2

No comments:

Post a Comment