19 November 2012

33. பெருமாள் திருமொழி


மெய்யில் வாழ்க்கையை மெய்யெனக் கொள்ளும்

வையந்தன்னொடும் கூடுவதில்லையான்

ஐயனே! அரங்கா! என்றழைக்கின்றேன்

மையல் கொண்டொழிந்தேன் என் தன்மாலுக்கே.1

தீதில் நன்னெறி நிற்க அல்லாது செய்

நீதியாரொடும் கூடுவ தில்லையான்

ஆதி ஆயன் அரங்கன் அந்தாமரைப்

பேதை மாமணவாளன் தன்பித்தனே. 2

எத்திறத்திலும் யாரொடும் கூடும் அச்

சித்தந்தன்னைத் தவிர்த்தனன் செங்கண்மால்

அத்தனே! அரங்கா! என்றழைகின்றேன்

பித்தனாயொழிந்தேன் எம்பிரானுக்கே. 3




No comments:

Post a Comment