6 November 2012

20.சித்தர் பாடல்கள் -சிவவாக்கியர்

செய்ய தெங்கிலே இளநீர் சேர்ந்த காரணங்கள் போல்

ஐயன் வந்திங்கென்னுளம் புகுந்து கோயில் கொண்டனன்,

ஐயன் வந்திங்கென்னுளம் புகுந்து கோயில் கொண்டபின்

வையகத்தில் மாந்தர் முன்னம் வாய்திறப்பது இல்லையே.



கோயிலாவது ஏதடா? குளங்க ளாவது ஏதடா?

கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே,

கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே

ஆவதும் அழிவதுவும் இல்லை இல்லை இல்லையே.

                 திருச்சிற்றம்பலம் 

No comments:

Post a Comment