25 September 2012

2. கண் மூன்றும் தழைத்த தேவன்

  என்னுயிர் நீ என்னுயிர்க்கோர் உயிரும் நீஎன்
                 
இன்னுயிர்க்குத்  துணைவன் நீ என்னை ஈன்ற
                
அன்னைநீ என்னுடைய அப்ப நீ என்
                
அரும்பொருள்நீ என்னிதயத் தன்பு நீஎன்
                 
 நன்னெறிநீ எனக்குரிய உறவுநீ என்
                 
 நற்குருநீ எனைக் கலந்த நட்புநீ என்
                  
 தன்னுடைய வாழ்வுநீ என்னைக் காக்குந்
                 
 தலைவன்நீ கண்மூன்று தழைத்த தேவே.
             
திருச்சிற்றம்பலம்

  -மகாதேவ மாலை, பாடல்[68]
                                                                                
 திருவருட்பா.

No comments:

Post a Comment