12 July 2014

58.அருணாசல அட்சர மணமாலை

நூலறி வறியாப்  பேதையன் என்றன்
    மாலறி வறுத்தருள் அருணாசலா

(நூலறிவு - புத்தகங்களைப் படிப்பதால் வரும் அறிவு; மாலறிவு -குழப்ப அறிவு, அரைகுறை அறிவு; மால் - மயக்கம்.)
எந்த நூல்களையும் கற்றறியாத எனக்கு ஆன்ம ஞானத்தை அருளிய அருணாசலனே, உம்மை வணங்குகிறேன்.
ஆன்ம ஞானம் தரக் கூடிய நூல்கள் எதனையும் படித்து அறியாத பேதைமை உடையவன் நான். என் மனதினால் எனக்குள்ள அரை குறை அறிவினை நீக்கியருள் அருணாசலா.( இது பக்தர்களுக்கு)

புத்தகங்களைப் படிப்பதனால் ஆன்ம அறிவு உண்டாவதில்லை. அவை நமக்கு சந்தேகங்களையும், நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்துகின்றன. 
ஸ்ரி ராமக்ருஷ்ண பரம ஹம்சர் கல்வி கற்றவர் அல்ல. அவருடைய தூய உள்ளத்திலிருந்து தோன்றிய தெய்விகச் சொற்களைக் கேட்டு இன்புற்றது மானுடம்.

நூல்களைப் படிக்காமலேயே எனக்கு அனைத்தையும் உணரச் செய்த அருட்பெருஞ் சோதியே என்பார் வள்ளலார்.
'ஓதாது உணர்ந்திட ஒளி அளித்து எனக்கே ஆதாரமாகிய அருட்பெருஞ் சோதி' - அகவல்

No comments:

Post a Comment