26 July 2014

72. அருணாசல அட்சர மணமாலை


பைங்கொடி  யாநான் பற்றின்றி வாடாமற்
பற்றுக்கோ டாய்க்கா அருணாசலா

பைங்கொடி நான், பற்றுக்கோடு  நீ!
பசுமையான கொடிக்குப் பற்றிப் படர பந்தல் இல்லாவிடினும், ஒரு கொம்பாவது தேவை.
அது போல எனக்கு, என் வாழ்வுக்கு ஆதாரமாய், துணையாய் என் வாழ்வைப் பயனுள்ளதாகச் செய்து
எனைக் காப்பாய்  அருணாசலா.
'தாவிப் படரக் கொழுகொம்பு இல்லாத தனிக் கொடி போல் பாவித் தனிமனம் தள்ளாடி வாடிப் பதைக்கின்றதே" என்று அருணகிரியின் கந்தரலங்காரப் பாடல் நெஞ்சை நெகிழ்விக்கின்றது!



No comments:

Post a Comment