10 July 2014

56. அருணாசல அட்சரமணமாலை

நீநானறப்  புலி  நிதங்களி  மயமா
      நின்றிடு  நிலையருள்  அருணாசலா

நீ நானற - நீ நான் அற; புலி - புல்லி(இடை எழுத்து குறைந்தது);களி -இன்பம்.

நீ நான் என்பது மறைந்து போய், இருவரும் ஒன்றாகக் கலந்து தினமும்,  சதாசர்வ காலமும்
சச்சிதானந்தத்தில் நிலைத்து நிற்க அருள் புரிவாய்.







No comments:

Post a Comment