1 July 2014

47. அருணாசல அட்சரமணமாலை

தூய்மன  மொழியர்  தோயுமுன்  மெய்யகந்
     தோயவே  அருள்என்  அருணாசலா

தூய்மையான மனம் உடையவர்களே, தூய இன்சொற்களைப் பேசவல்லவர்.''மனத்துக்கண் மாசிலன் ஆதல்" என்றார் வள்ளுவப் பெருந்தகை.
(தோயுமுன் -தொடுதல் செய், மெய்யகம்- உண்மையான உட்பொருள், ஆன்மா)
தூயமனம் உடையவர்களின் இனிய மொழிகள் உன்னை அலங்கரிக்கின்றன. அத்தகைய உன் ஆன்மாவில் தோய்ந்து ஒன்றுபடும்படி அருள்வாயாக.
பாலில் மோர் சேர்த்தால் இரண்டும் தோய்ந்து தயிராகிறது. அதுபோல என்னை உன் அருட் சக்தியுடன் தோய்த்து, நானே நீயாகும்படி அருள்வாயாக.

No comments:

Post a Comment