30 June 2014

46. அருணாசல அட்சரமணமாலை

துப்பறிவுஇல்லா இப்பிறப்பு என்பயன்
ஒப்பிட வாயேன் அருணாசலா

துப்பறிவு - துப்பு- உளவு செய்யும் அறிவு, இரகசியமாக செய்யப்படும் சோதனை.
ஆராயும் அறிவு இல்லாத இப்பிறப்பால் என்ன பயன்?என் பிறப்பை நான் எதனோடு
ஒப்பிட்டுப் பார்க்க இயலும்?ஒப்பிட சக்தியற்றவன் நான். நீயே விரைந்து வந்து ஒப்பிட்டுப் பார்!

பிறப்பைப் பற்றிய சோதனையா? அதுவும் துப்புத் துலக்க வேண்டுமா? அது என்னவோ?
இன்பமோ துன்பமோ ஒருவன் எப்போதும் அமைதியும் ஆனந்தமும் உடையவனாக
இருக்க வேண்டுமென்றால் தன்னைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். தான் யார் என்ற
ஆன்ம விசாரம் செய்து, 'நான்' என்பது இந்த உடலா, மனமா, உயிரா அல்லது வேறு ஏதாவதா?
என்ற ஆராய்ச்சியே 'துப்பறிவு'. தன்னைத்தான் அறியாவிட்டால் இப்பிறவியால் ஒரு பயனும் இல்லை.என்னை அறிந்து கொள்ள அருள் செய்வாய் அருணாசலா!

No comments:

Post a Comment