10 June 2014

26.அருணாசல அட்சர மணமாலை

கெளதமர்  போற்றும் கருணை மாமலையே
          கடைக் கணித்தாள்வாய் அருணாசலா

 கெளதம முனிவரால் போற்றப்படும் கருணைமாமலை அருணாசலன்!
முனிவரின் பக்திக்கு மகிழ்ந்து அவருக்கு அருள் புரிந்தான் இறைவன்.

அது மட்டும் அல்லாது உமையம்மையை,''அருணாசலம் சென்று கெளதமரை குருவாக ஏற்று அவர் உபதேசப்படி தவம் செய்வாயாக,'' என்று பணித்தார்.  எனவே உமையம்மைக்கே குருவானவன் கெளதம முனிவன்.
அருணாசலனே!
உன் கடைக்கண் பார்வையால் என்னையும் பார்த்து முக்தி தந்து அருள் புரிவாயாக, என வேண்டுகிறார்.

No comments:

Post a Comment