24 June 2014

40.அருணாசல அட்சர மணமாலை

ஞானம் இல்லாது உன் ஆசையால் தளர்வற
  ஞானம் தெரித்து அருள் அருணாசலா

உன்மேல் ஆசை, ஞானம் இல்லை, தளர்வுற்றேன்!
அருள் கூர்ந்து  ஞானம் கொடுப்பாய்!

இறைவனே உன்னைக் காண வேண்டும், அறிந்து கொள்ள வேண்டும், ஆனந்தத்தில் திளைக்க வேண்டும் என்றெல்லாம் எனக்கு ஆசை. எப்படி என்ற அறிவு எனக்கு இல்லை!எடுத்துச் சொல்லுவாரும்  இல்லை.அதனால் நான் மனம் நொந்தேன், தளர்வடைந்தேன்.
என் தளர்ச்சி நீங்குமாறு எனக்கு அருள் கூர்ந்து                                                                                         ஆன்ம ஞானத்தை கொடுத்து அருள்வாயாக.



No comments:

Post a Comment