14 June 2014

30. அருணாசல அட்சர மணமாலை

சீரை அழித்து நிர்வாணமாச் செய்து அருட்
  சீரை அளித்தருள் அருணாசலா

எனது அகந்தையை அழித்து அருட் சீரை அளித்து அருள்வாயாக.

சீரை என்றால் சீலை (ஆடை) மரவுரி, கந்தை, தராசுத்தட்டு என பல பொருள்கள் உண்டு.

சீர் என்றால் செல்வம், சிறப்பு. திருமணங்களில் சீர் வரிசை செய்வார்கள்!

என்னிடம் என்ன சீர், சிறப்பு இருக்கிறது? பிறந்த பரம்பரையின் சிறப்பு, பொருளால், பொன்னால்,உடைமைகளால், கல்வியால், பதவியால் அழகால் வந்த சிறப்புகள் எல்லாம் இருக்கிறது.
அதனால் என்னுடையது, நான் என்ற அகந்தை, கர்வம் இருக்கிறது.

இந்த என்னுடையது என்ற அகந்தை அழிந்து, இருகரங்களால் வணங்கி, எல்லாம் உனதே என நிர்மலமான, சுதந்திரமான உணர்வு ஏற்படுதல்தான் நிர்வாணம்!அதுவே சச்சிதானந்தப் பேருணர்வு. ஆடையற்று இருப்பது அல்ல!

அருணாசலன் நமக்குத் தரக் கூடிய சீர் வரிசை என்ன?
சச்சிதானந்தமாகிய அருட்செல்வம்!


No comments:

Post a Comment