19 June 2014

35. அருணாசல அட்சர மணமாலை

சையெனத் தள்ளிற் செய்வினை
    சுடுமலால் உய்வகை ஏதுரை அருணாசலா

கிரிவலம் வருகையில் திடீரென உனர்ச்சி வயப்பட்டுப் பாடிய பாடல் தொகுப்பு அட்சரமணமாலை. ஒரு குழந்தை தாயிடம் கெஞ்சுவது, நட்புரிமை காட்டுதல், கேலி செய்தல், பயத்தை வெளிப்படுத்துதல், எனப்  பல்வேறுவகை உணர்ச்சி வெளிப்பாடுகளை நாம் அட்சர மணமாலையில் காண்கிறோம்!

சூது செய்து சோதியாதே, செப்படி வித்தை காட்டாதே, சோதி உருக்காட்டு, உருப்படு வித்தை காட்டு, என்றெல்லாம் சொன்னவர், கல்லினுள் தேரைக்கும் அருள் செய்பவனாம் இறைவனிடம்,''நீயே என்னை
சையென்று கைவிட்டுவிட்டால் என்வினைகள் எனக்கு தீங்கு விளைக்குமேயன்றி என்னை யார் காப்பாற்றுவார்கள்? எனவே என்னைக் கைவிடேல், எனக்கு அருள் புரிவாய்.'' என வேண்டுவார்.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது பழமொழி. செய்வினை, செய்த வினை, செய்யப்போகும் வினை எல்லாமே துன்பம் விளைவிக்கும்.

''தீது நினைக்கும் பாவிகட்கும் கருணை செய்தவன் நீ! என்னளவில் சூது நினைப்பாய் எனில் யாரைத் துணை கொள்வேன்?''
''குற்றம் புரிதல் எனக்கியல்பே, குணமாக் கொள்ளல் உனக்கியல்பே'' என்று கருணை மயமானவன்
இறைவன் என்பார் வள்ளல் பெருமான்.





No comments:

Post a Comment