2 June 2014

18. அருணாசல அட்சர மணமாலை

கீழ் மேல் எங்கும் கிளரொளி மணி என்
     கீழ்மையைப் பாழ் செய் அருணாசலா

கீழ், கீழ்மை என்பது என்ன?  மனிதப் பிறவி எடுத்த ஒவ்வொருவரும்  இயற்கையிலேயே ஆன்மசக்தி உடையவர்கள்தான். ஆனால் மாயை, அல்லது அகங்காரத்தால் அதனை மறந்து தன்னுடைய உடலே தான் என்று கருதுவது கீழ் எனப்படும் அகந்தையாகும். தான் என்ற அகந்தை நீங்கினால் ஆழ்மனத்தின்
அதிசய சக்தியான ஆன்ம தரிசனம் பெறலாம்.
பிரபஞ்சம் முழுதும் பரவி நிற்கும் ஒளி பொருந்திய மணியே, அருணாசலனே எனது
அஞ்ஞானத்தை அழித்து நின் ஒளியால் அருள்வாயாக.
"உருக்கி அமுதூற்றெடுத்து என் உடல் உயிரோடு உளமும் ஒளிமயமே ஆக்குற மெய் உணர்ச்சி அருளாயோ," என்பது வள்ளல் வாக்கு.



No comments:

Post a Comment