6 June 2014

22. அருணாசல அட்சர மணமாலை

கேளாது அளிக்கும் உன் கேடில் புகழை
   கேடு செய்யாது அருள் அருணாசலா

மனிதன் கேட்காமலே எத்தனை செல்வங்களை இறைவன் கொடுத்திருக்கிறான்! வானும், நிலவும்,
ஆதவனும், கடலும், மலையும் ஆறும், காடும், பசுமைப் புல்லும்.....இன்னும் எத்தனையோ!
தனி மனிதனுக்கு அவன் வழங்கியுள்ள செல்வங்கள் தான் எத்தனை? அன்பும், கருணையும்
மனித வாழ்வுக்குத் தேவை என்பதற்காகவே தாயும், தந்தையும்,குருவும், சுற்றமும் அளித்துள்ளான்.

இங்கு இதுவரை தலைவி பிரார்த்தனை செய்கிறாள்! அருள் செய்வாய், கிருபை செய்வாய் என்றெல்லாம் சொல்லிவிட்டு,' கேட்காமலே அனைத்தையும் கொடுப்பவன் என்ற அழியாப் புகழ் பெற்றவனே, ஜாக்கிரதை, உன் பெயரைக் கெடுத்துக் கொள்ளாதே! நான் வேண்டியது உன் அருள்.
கருணை மழை பொழிவாய் என வேண்டுகிறாள்.
( ஶ்ரீ ரமணர் கேட்காமலே அவருக்கு ஆன்ம ஞானம் அளித்ததை நினைவு கூர்கிறார்)

No comments:

Post a Comment