1 June 2014

17. அருணாசல அட்சர மணமாலை

கிரியுரு  வாகிய  கிருபைக் கடலே
        கிருபை கூர்ந்தருள்வாய் அருணாசலா

மலை உருவாக அமர்ந்திருக்கும் கருணைக் கடல் அருணாசலேஸ்வரர். எல்லா ஊர்களிலும் கோயிலின் உள்ளே வீற்றிருக்கும் இறைவனை வழிபடுவார்கள். ஆனால் திருவண்ணாமலையில் மலையே இறைவனாய் வணங்கப் படுகிறது. வெகு தூரத்திலிருந்து திருவண்ணாமலையை தரிசிக்கும் போதே மனம் பரவசப்படுகிறது என்பது உண்மைதான்.

பார்ப்பதற்கு சிவந்தும், மரங்கள் அடர்ந்தும், கல்லும் மண்ணுமாகக் காட்சியளிக்கும் அண்ணாமலை பூமியின் இதயம் எனப்படுகிறது. இங்கே சிவபெருமான் தன் கணங்களோடும், உமையம்மையோடும்
வாசம் செய்கிறாராம்.

கல்லும் முள்ளும் நிறைந்த மலைத் தோற்றம் உடையவராக இருந்தாலும் எல்லாஇடங்களிலும், எந்நேரத்திலும், எப்போதும் இறைவனுடைய கருணை இருப்பதால் கிருபைக் கடல் என்றார்.
கிருபைக் கடல் - ஆனால் மீண்டும் கிருபை கூர்ந்து அருள்வாய் என்கிறாரே!
கூர்ந்து - மிகுதல், அதிகரித்தல்,பெருகுதல். மேலும் மேலும் உன் கருணை அதிகரிக்குமாறு அருள்வாய்.



No comments:

Post a Comment