25 June 2014

41. அருணாசல அட்சர மணமாலை

ஞிமிறுபோல் நீயும் மலர்ந்திலை என்றே
   நேர்நின்றனை என் அருணாசலா


ஞிமிறு - வண்டு;
வண்டு தாமரை மலரை நோக்கி வருகிறது. தாமரையோ மலரவில்லை. மலர்ந்தால் தேன் அருந்தலாம்.எனவே மலரைச் சுற்றிச்சுற்றி வருகிறது.

''நீயும் மலர்ந்திலை என்றே நேர் நின்றனை"
என்னுடைய ஆன்மமலர் இன்னும் மலரவில்லை என்று நீயும் வண்டைப் போல் என்னுடைய அகந்தை நீங்கி விழிப்புணர்வு வருவதற்காக காத்திருக்கின்றாய்.

உன்னாலன்றி யாரால் என் இதயத்தை மலர்விக்கமுடியும்? உன் அருளாகிய சூரிய ஒளி என் அகந்தையை நீக்கட்டும். ஆன்ம ஒளி பரவச்செய்யட்டும்.

No comments:

Post a Comment