20 June 2014

36. அருணாசல அட்சரமணமாலை

சொல்லாது சொலி நீ சொல்லற நில்லென்று
 சும்மா இருந்தாய் அருணாசலா

சொல்லற நில் - சொற்களற்ற அமைதி நிலை!
மனம் ஒருமுகப்படும் போது அமைதி உண்டாகிறது.அந்த அமைதியில் எண்ணங்கள் நின்று விடும். எண்ணங்கள் இல்லா நிலை அடைவது என்பது சாதாரணமான மனிதனுக்கு மிகக் கடினமானது.

ஶ்ரீ ரமணர் அருணாசலம் வந்தவுடன் சொல்லற நின்றார். பல ஆண்டு மவுனத்திற்குப் பிறகே பேச ஆரம்பித்தார்! அதையே ''சொல்லற நில்லென்று சொல்லாது சொலி நீ சும்மா இருந்தாய்'' என்கிறார்.

இறைவனாம் அருணாசலன் ஶ்ரீ ரமணருக்குச் செய்தது மவுன உபதேசம். அதையே ஶ்ரீ ரமணரும் கடைப் பிடித்தார்.
முதன் முதலில் பால் பிரண்டன் அவரை சந்திக்க வந்த போது பல கேள்விகளைக் கேட்க, அவற்றைக் குறித்துக் கொண்ட நோட்டுப் புத்தகத்துடன் வந்தார். ஆனால் ஶ்ரீரமண சந்நிதியில் சிறிது நேர மவுனத்திற்குப் பிறகு அவருடைய மனதில் இருந்த எல்லாக் கேள்விகளும் மறைந்தன!

" சொல்லற நில்லென்று சொல்லாது சொல்லி நீ சும்மா இருந்தாய் அருணாசலா.''
மனதை எண்ணங்களற்ற நிலைக்குக் கொண்டு செல்லுதல்தான் ஆன்ம விசாரத்தின் முதற்படி!

அருணாசல சிவ அருணாசலசிவ அருணாசல சிவ அருணாசலா.




No comments:

Post a Comment