16 June 2014

32. அருணாசல அட்சர மணமாலை

சூது செய்து என்னைச் சோதியாது இனியுன்
       சோதி உருக் காட்டு அருணாசலா

சோதி - பரிசோதனை செய்து பார்த்தல்; சோதி - ஒளி;
சூது என்றால் உபாயம், ஒரு வழி.
கலப்படம் செய்திருப்பதைக் கண்டு பிடிக்க பல உபாயங்கள் உள்ளன.
தங்கத்தைக் கல்லில் உரைத்துப் பார்ப்பார்கள்!
ஆனால் மனிதனை எப்படி உரைத்துப் பார்ப்பது? இயற்கையின் சூட்சுமத்தைப் பாருங்கள்!
ஐந்து புலன்களாகிய குதிரைகள்! அதனை செலுத்தும் மனமாகிய ஓட்டுனர், சாரதி!

முந்தைய கண்ணியில் 'சுகமாகிய கடல் அலைத் தாலாட்டில், சொல்லும், உணர்வும் அடங்க சும்மா இருக்கும் ஆனந்தத்தை சொன்னார் அல்லவா?
இப்போது மீண்டும் பிரார்த்தனை! வேண்டுதல்!
அப்பனே, இந்த ஆனந்த பரவசத்தில் இருந்து, ஏதாவது வழி கண்டுபிடித்து என்னை அடுத்த உயர்ந்த நிலைக்கு அனுப்பலாமா வேண்டாமா என்று சோதனை செய்து பார்க்காமல் உன்னுடைய ஒளி பொருந்திய உருவத்தைக் காட்டி என்னை ஆட்கொள்வாயாக! இதுவரை சோதித்தது போதும்!
இனி அருள் செய்.

தவ வாழ்க்கையை மேற்கொள்வதன் சிரமங்களை பல யோகியரின் வாழ்விலிருந்து அறிந்து கொள்கிறோம்! கல்லும் முள்ளும் நிறைந்த கடினமான பாதை அது.

நாளை இறைவனின் செப்படி வித்தை மலர் மணத்தை நுகர்வோம்.




No comments:

Post a Comment