12 June 2014

28.அருணாசல அட்சர மணமாலை

சாப்பா டுன்னைச் சார்ந்த உணவாய்
   யான்சாந்தமாய்  போவன் அருணாசலா

சாப்பாடு = உணவு; சா- பாடு = சா-இறந்துபோ, மரணம்; பாடு= அனுபவம்; அதாவது மரண அனுபவம்

ஆன்ம ஞானம் வேண்டி நான் உனக்கு உணவாய்,''நீ என்னை என்ன வேண்டுமானாலும் செய்துகொள்,'' என்று உன்னை அடைந்தேன். நீயோ எனக்கு மரண அனுபவத்தைக் கொடுத்து உன்னுடன் என்னைத் தன் மயமாக்கி 'நான் யாரென' உணரச்செய்தாய்! அந்த அனுபவம் காரணமாக அகந்தை நீங்கி ஆன்மானுபவம் பெற்று நான் சாந்தமயமானேன். முற்றிலும் அமைதியடைந்தேன்.

பிறந்த உயிர்கள் எல்லாம் இறக்கின்றன. உடலில் இருந்து உயிர் வெளியேறுகிறது. மரணதேவனுக்கு உணவாகிறது. உயிரற்ற சடலம் அக்னிக்கும், வாயுவுக்கும், நீருக்கும், பூமிக்கும் அர்ப்பணமாகிறது. எஞ்சியிருக்கும் ஆன்மா அமைதியாய் இறை சக்தியுடன் இரண்டறக் கலந்து அமைதியடைகிறது.

தன்னிடம் அடைக்கலம் அடைந்தவர்களின் அகந்தையை நீக்கி ஆன்மானுபூதி அடையச்செய்வதால் 'நினைத்தாலே முக்தியருளும் தலம்' எனப்படுகிறது அருணாசலம்.

No comments:

Post a Comment