28 June 2014

44.அருணாசல அட்சர மணமாலை

திரும்பி அகந்தனைத் தினம்அகக் கண்காண்
   தெரியும் என்றனைஎன் அருணாசலா

'தானே தத்துவம் இதனைத் தானே காட்டுவாய்,' என்றார் முந்தைய கண்ணியில்!
அருணாசலர் பதில் சொல்கிறார்;
உனக்குள்ளே மனதைத் திருப்பி உன் உள்முகக் கண்ணால் பார்! தெரியும்!
திரும்பி - உடலைத் திருப்புதல் அல்ல.
அகம்- உள்ளே! உனக்கு உள்ளே, எல்லா எண்ணங்களையும் ஒதுக்கிவிட்டு, அமைதியாய் கவனி

 உலக விஷயங்களைத் தள்ளிவைத்துவிட்டு, உனக்குள்ளே உன்னைத் தேடு!அகக் கண்காண் தெரியும் - தேடியது கிடைக்கும். இதனை உள்ளுணர்வால் உணரமுடியுமே அல்லாது வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

''முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்குத் தாய்தன் மணாளனோ டாடிய
சுகத்தை சொல்லென்றார் சொல்லுமா றெங்கனே''
                                                              - திருமந்திரம்







No comments:

Post a Comment