7 June 2014

23. அருணாசல அட்சர மணமாலை

கையினில் கனி உன் மெய்ரசம் கொண்டு உவ
கை வெறி கொளவருள் அருணாசலா

கையினில் கனி- கையில் உள்ள கனிக்கு இருக்கிறது என்ற சாட்சி தேவையில்லை. அதை அனைவரும் அறிவர்.
கையில் உள்ள கனி எது? -அருணாசலன்
மெய்ரசம் கொண்டு - கையில் உள்ள கனியைப் பார்த்துக்  கொண்டிருந்தால் சுவை தெரியுமா? கனியின் சுவை அதை உண்ணும் போதுதான் தெரியும்.அதேபோல அருணாசலக் கனியான உன்னை பக்தியினால் அனுபவித்தால்தான் உன்னுடைய உண்மையான பரசிவ ஆன்ம ஞானத்தை அறிய முடியும்! அதனால் ஏற்படக்கூடிய ஆனந்த பரவசத்தில் என்னையே மறக்கமுடியும்1
உவகைவெறி கொளவருள் அருணாசலா-உன்னை அறிந்த இன்ப வெறியில் திளைக்கச் செய்வாய் அருணாசலா!
தன்னில் தானேயாகி நிற்கின்ற அருணாசல தரிசனமே இன்பத்திற்கு வழி.

2 comments:

  1. Awesome. Pls tell me that picture from which temple?

    ReplyDelete
  2. Madurai "MEENAKSHI" AMMAVARU.

    ReplyDelete