22 June 2014

38. அருணாசல அட்சர மணமாலை

செளரியம் காட்டினை சழக்கற்றது என்றே
 சலியாது இருந்தாய் அருணாசலா

செளரியம் - வீரம்; சழக்கு - குற்றம், தளர்ச்சி; சலியாது - அசையாது.

சூரிய ஒளிக் கிரணங்கள் இருளகற்றுவது போல அறியாமையாகிய இருளை நீக்குபவன் செம்மலையாகிய அருணாசலன். தன்னைக் காண்பவர்க்கு காண்பவரின் மன நிலைக்கேற்றவாறு
அருள் செய்பவன்.
அருணாசலன் தன் வீரத்தைக் காட்டினன்! எப்படி? என் அறியாமை இருளகற்றி, அகந்தையை நீக்கினான். அதனால் என் சழக்கற்றது. தளர்ச்சி நீங்கி நான் உயிர்த்தெழுந்தேன். ஆன்ம ஞானம் பெற்றேன். அதுதான் வேலை முடிந்தது என்று  மீண்டும் அசைதல் இன்றி நீ அமைதியாய் இருக்கிறாய்.
நீ வீரம் காட்டி எனக்கு அருள் செய்யாவிட்டால், எனக்குத் துணையாகாவிட்டால் நான் என்ன செய்வேன்? எனவே அருள் புரிவாயாக.




1 comment:

  1. என்ன அழகான அட்சர மணிமாலையை வரைந்துள்ளீர்கள்!

    amas32

    ReplyDelete