13 June 2014

29. அருணாசல அட்சர மணமாலை

சித்தம் குளிரக் கதிர் அத்தம் வைத்து அமுத

   வாயைத் திற அருள்மதி அருணாசலா

'ச'கர வரிசை முதல் பாடலில், 'சகலமும் விழுங்கும் கதிரொளியானவனே மனத் தாமரையை மலர்விப்பாய்,' என்றவர் அருணாசலனை இப்பாடலில்  குளிர்ச்சி பொருந்திய ,'அருள்மதி' என்கிறார்.

அருணாசலன்  அருள்நிலவு, மனம் ஆம்பல் மலர். நிலவின் குளிர்ச்சி பொருந்திய அமுத கிரணங்களாகிய கரங்களால் என்மனதை ஆனந்தத்தில் ஆழ்த்துவாயாக!
அகந்தையால் மூடப்பட்டிருக்கும் அமுத கலசத்தைத் திறக்க அருணாசலனாலேயே முடியும்.

இறைவனின் அருள் இருந்தால்தான் ஆன்ம ஆனந்தானுபவம் கிடைக்கும். ' All can be done only when the God touch is there' என்பார் ஶ்ரீஅரவிந்தர்.


No comments:

Post a Comment