3 June 2014

19.அருணாசல அட்சர மணமாலை

குற்றமுற்று அறுத்தெனைக் குணமாய்ப் பணித்தாள் 
    குருவுருவாய் ஒளிர் அருணாசலா

மன இருளை நீக்குபவர் குரு. குரு உருவாய் விளங்குபவன் அருணாசலன்.
நான் இதுவரை செய்த எல்லாக் குற்றங்களையும் அறுத்து, வேருடன் நீக்கி,
என்னை நற்குணங்கள் உடையவனாகச் செய்து, என்னை ஆட்கொள்வாயாக.

முந்தைய கண்ணியில் 'கீழ்மையைப் பாழ் செய்' என்றார். இக்கண்ணியில் எல்லாக்
குற்றங்களையும் நீக்கி, குணவானாக்கி, ஆட்கொள்வாய் என்கிறார்.

அருணாசலசிவ அருட்பெருஞ் சோதி.

No comments:

Post a Comment