11 June 2014

27. அருணாசல அட்சர மணமாலை

சகலமும் விழுங்கும் கதிரொளி யின மன
சலச மலர்த்திவிடு அருணாசலா

கதிரொளியினன் - சூரியன்; சலசம் -தாமரை; விழுங்குதல் - முழுமையாக உட்கொள்ளுதல்.

சூரியன் இவ்வுலகிலுள்ள அனைத்தையும் தன் ஒளிக்கதிர்களால் கவர்ந்து மாசுகளை நீக்கும்.
தாமரை மலரை மலரச்செய்யும்!

அதுபோல நான் ஆன்ம ஞானம் பெறத் தடையாய் இருக்கின்ற அகந்தையால் மூடப் பெற்றிருக்கும்
அஞ்ஞான இருளை நீக்குவாய்! என் இதயத் தாமரையை மலரச் செய்வாய். ( மன சலசம்)

அகத்தில் உள்ள அகந்தையாகிய அறியாமை இருளை நீக்குவது அருணாசலக் கதிரொளியே.

No comments:

Post a Comment