27 June 2014

43.அருணாசல அட்சர மணமாலை

தானே தானே தத்துவம்  இதனைத்
தானே காட்டுவாய் அருணாசலா

'நான்' என்பது தன்மை ஒருமைப் பெயர்.
'தான்' என்பது படர்க்கை ஒருமைப் பெயர்.

நீ யார்? நான், எனக்கு ஒரு உருவம், பெயர் என்று பல சுட்டுதல்கள் உள்ளன. தான் என்பது என்ன?
அட, தானே எல்லாம் நடக்கும் என்று விட்டுவிட்டேன், என்கிறோம். அதாவது என்னைச் சாராமல், தனித்து நின்று, இயங்காமல் இயங்கும் 'அது' தான் 'தான்'.
''அது என்ற சொல் தத்வமஸி என்ற சாமவேத வாக்கியத்தில் வரும் தத் என்ற பதமாகும். தத்-அது; த்வம் -நீ; அஸி- ஆகின்றாய். இது ஆசாரியன் சீடனுக்கு உபதேசிப்பது.'' கந்தரநுபூதி, க்ருபானந்த வாரியார்.

அதுவாக நீயே ஆகின்றாய்! ''தானே தானே தத்துவம்'' இதனை என்னுள் தானாக நிற்கும் நீயே காட்டுவாய் அருணாசலா.

No comments:

Post a Comment