22 July 2014

68.அருணாசல அட்சரமணமாலை

புல்லறிவு ஏதுரை நல்லறிவு ஏதுரை
   புல்லிடவே அருள் அருணாசலா

புல்லறிவு - மயக்கத்தைத் தரக்கூடிய பொய் உணர்வு, சிற்றறிவு, அஞ்ஞானம், அறியாமை
நல்லறிவு - மெய்யுணர்வு, ஞானம், பேரறிவு, தன்னைப் பற்றி விசாரித்து அறிந்த ஆன்ம ஞானம்

உன்னோடு இரண்டறக் கலந்து மெய்யறிவு அடைந்தபின், பொய்யறிவு, நல்லறிவு என்ற பேதங்கள் ஏது?
சொல்வாய் அருணாசலா. ஆன்ம அறிவு எது என்ற தெளிவு ஏற்பட்ட ஒருவனுக்கு நன்மை தீமை என்ற வேற்றுமைகள் இல்லை.

No comments:

Post a Comment