7 July 2014

53. அருணாசல அட்சரமணமாலை

                                     
நகைக்கிட மிலைநின் நாடிய எனைஅருள்
நகையிட்டுப் பார் நீ அருணாசலா 

நகை - பரிகாசமாக சிரித்தல், ஆபரணம்.

அருணாசலனே! நீ யார்? ஆதியன், சோதியன்,காக்கும் காவலன், காண்பரியப் பேரொளி, தில்லைக் கூத்தன்! நானோ உன் கால் தூசு!  அப்படி இருக்கும்போது உன்னைக் காண வேண்டும், அடையவேண்டும், இரண்டறக் கலக்க வேண்டும் என்றெல்லாம் ஆசைப்படுகிறேன் என்று என்னைப்
பரிகாசம் பண்ணிச் சிரிக்க இதுவா நேரம்?
என்னைப் பார்த்து நகைக்காமல், எனக்கு உன் அருளாகிய நகையை, சற்று அணிவித்து அழகு பாரேன்.

இறைவனின் அருள்நகையை அணிந்த அருளாளர்கள் அட்சரங்களால் ஆன மணமாலைகளை அவனுக்கு அணிவித்து அழகு பார்த்தனர். வள்ளலாரின் திருவருட்பா மாலை, அருணகிரியின் திருப்புகழ் மாலை, நாயன்மார்களின் தேவார மாலை, ஆழ்வார்களின் திவ்யப்பிரபந்த மாலை, ஶ்ரீஅரவிந்தரின் 'சாவித்ரி' மாலை எத்தனை எத்தனை சொல்மாலைகள்! அத்தனை மஹான்களின் பாதகமலங்களுக்கும் வந்தனங்கள்.

No comments:

Post a Comment