4 July 2014

50.அருணாசல அட்சரமணமாலை

தைரிய  மோடுமுன்  மெய்யக  நாடயான்
   தட்டழிந்தேன் அருள் அருணாசல

அருணாசலனே,
நான் யார் என்பதை நீயே எனக்குக் காட்டிக் கொடுப்பாய்,
'தானே தானே தத்துவம்,
திரும்பி அகந்தனை அகக் கண்ணால் பார்,
உன்னை ஆன்மவிசாரத்தால் துப்பறிந்து கண்டுபிடி, ' என்றவர்,
 தூய மனம், மொழி உடையாருக்கே தரிசனம் தரும் உன் உண்மையான அகம் தோய வேண்டும் என்று சொன்னவர்,
இறைவனே நீ எத்தனை பெரியவன்? பரிபூரணனான உன்னை அடைய தைரியமோடுதான் வந்தேன்! உன்னை மறைத்திருந்த மாயத் திரையை நீக்கி,
என் அகந்தை அழியச் செய்து,  உன் அருளால் உன்னை அடையச்செய்தாய்.

No comments:

Post a Comment