6 July 2014

52. அருணாசல அட்சரமணமாலை

தோடமில்  நீஅகத்  தோடொன்றி என்றுஞ்சந்
      தோடம் ஒன்றிட அருள் அருணாசலா

தோடம் என்பது 'தோசம்' -'தோஷம்';அகத்தோடொன்றி - அகத்துடன் இரண்டறக் கலந்து;
சந்தோடம் - சந்தோஷம்.

எந்தக் குற்றமும் அற்றவன் நீ! பல குற்றங்களும் குறையும் உள்ளவன் நான்.
அதனால் எனக்கு உன்னோடு ஒன்றுகின்ற சக்தியில்லை. ஆனால் அந்த உரிமை, சக்தி உனக்கு உண்டு.
நீ என்னோடு ஒன்றினால்  மகிழ்ச்சியானது என்னோடு ஒன்றும்! சதா சர்வ காலமும் நான் ஆனந்தத்தில் திளைத்திருப்பேன்!அருள்வாயாக அருணாசலனே!

No comments:

Post a Comment