14 July 2014

60. அருணாசல அட்சர மணமாலை

நேசமில் எனக்கு உன் ஆசையைக் காட்டிநீ
     மோசம் செய்யாதருள் அருணாசலா

உன்மீது எனக்கு சிறிதும் நேசம் அதாவது அன்பு இல்லாதிருந்தது.என்றாலும்
உன் மீது பக்தி செய்ய வைத்து அருள் செய்தாய்  அருணாசலா.

'ஆசை காட்டி மோசம் செய்தல்' என்று சொல்லும் வழக்கம் நம்மிடையே  இருக்கிறது. இது தினசரி வாழ்வில் காணப்படும் ஒன்றே. நாம் விரும்பத ஒன்றைத் தருவதாகக் கூறி பிறகு அதனைத் தர முடியாது என்று சொல்பவரை மோசம் செய்தான் என்கிறோம்.

இங்கு ஶ்ரீ ரமணர் உன்னை அறியாதிருந்த வயதில் உன்னைக் காண்பித்து, ஆசையை உண்டாக்கி
மோசம் செய்யாமல் அருள் செய்தாய் என்றும், மற்றுள பக்தர்களுக்கும் அருள் செய்ய வேண்டும் என்றும் இறைஞ்சுகிறார்.


No comments:

Post a Comment