2 July 2014

48. அருணாசல அட்சரமணமாலை

தெய்வமென்று உன்னைச்  சாரவே என்னைச்
சேர ஒழித்தாய் அருணாசலா


சார்தல் - புகலடைதல், சரணடைதல்.
தெய்வம் நீயே என்று நான் உன்னிடம் புகலடைந்தேன். என் சரணாகதியை ஏற்றுக் கொண்டு என் அகந்தையை அடியோடு ஒழித்து நானாகிய என்னைத் தானாக்கிக் கொண்டாய் அருணாசலா.

''யானாகி என்னுள் இருக்கின்றாய் என்னேயோ,''  நானாகி என்னுள் நடிக்கின்றாய் என்னேயோ,''
''நான்ஆனான்  தான்ஆனான் நானும்தா  னும்                                                                                              ஆனான்,''  என்று ஆனந்தக் கூத்தாடுகிறார்                                                                                                வள்ளல் பெருமானார்.
                                                                                         

No comments:

Post a Comment