3 July 2014

49. அருணாசல அட்சர மணமாலை

தேடா துற்றநல் திருவருள் நிதிஅகத்
 தியக்கம் தீர்த்தருள் அருணாசலா

நிதி - செல்வம்.
தேடாது உற்ற - தேடி அலையாமல் எனக்குக் கிடைத்த
திருவருள் நிதி - இறைவனுடைய அருளாகிய செல்வம்
அகத்து இயக்கம் - என் மனதின் எண்ணங்களின் வேகத்தை
தீர்த்தருள் - அடக்கி ஆளுதல்

எங்கும் தேடித் திரியாது தமக்கு இறையருள் ஆகிய செல்வம் கிடைத்ததையும்,
எண்ணங்கள் அடங்கி, மனம் அமைதியுற்று ஆனந்தபரிபூரணத்தில் ஒடுங்கியதையும்
இங்கு எடுத்துச் சொல்கிறார்.

No comments:

Post a Comment