25 July 2014

71.அருணாசல அட்சர மணமாலை

பேய்த்தனம் விடவிடாப் பேயாய்ப் பிடித்தெனைப்
     பேயனாக்கினை யென் அருணாசலா

பேய்த்தனம் விட - அகந்தைப் பேய் என்னை விட்டு அகல
விடாப்பேய் - என்றும் விட்டு அகலாத அருணாசலப் பித்து
பேயனாக்கினை - உன்மீது பைத்தியமாக்கினை

அருணாசலனே! அகந்தைப் பேய் என்னை விட்டு அகலவும், உன்மீது பக்திப் பித்து என்னைப் பீடிக்கவும்,
நான் உன் மீது பைத்தியமானேன்.

அவரே வியப்புறும் வகையில் அவருக்கு ஆன்ம ஞானம் நொடிப் பொழுதில் சித்தித்ததை இவ்வாறு ஶ்ரீ ரமணர் குறிப்பிடுகிறார். 

No comments:

Post a Comment